மூத்த அமைச்சர்கள் அதிமுகவில் ராஜினாமா…!நறுக்கென பதில் தெரிவித்த துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் …!

மூத்த அமைச்சர்கள் அதிமுகவில் ராஜினாமா செய்து விட்டு கட்சிப்பணிக்கு செல்வது  குறித்து  துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து  தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறுகையில்,
மூத்த அமைச்சர்கள் அதிமுகவில்  ராஜினாமா செய்து விட்டு கட்சிப்பணிக்கு செல்ல வேண்டும் என்பது உங்களது யூகம். அதற்கு பதில் கூற முடியாது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் மக்களவை தேர்தலில் தனித்து போட்டி என்ற முடிவில் இருந்து பின்வாங்காமல் உறுதியாக இருக்க வேண்டும். மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் நினைவேந்தல் கூட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு வந்தால், முதல்வருடன் கலந்து ஆலோசித்து செல்வோம் என்றும் கூறியுள்ளார்.
DINASUVADU

Leave a Comment