யானைகள் அடிக்கடி சாலையை கடக்கும் பகுதிகளில் தனி மேம்பாலம் ! அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

யானைகள் அடிக்கடி சாலையை கடக்கும் பகுதிகளில், அதற்கென தனியே மேம்பாலங்கள் அமைக்கும் திட்டம் அரசின் பரிசீலனையில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் திமுக எம்.எல்.ஏ. பிச்சாண்டி கேள்விக்கு பதிலளித்த அவர், யானைகள் ஊருக்குள் வராமல் தடுக்க வனத்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

மேலும், யானைகள் ரயில்களில் அடிபடுவது குறைக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், வெளிநாடுகளில் உள்ளதுபோல, யானைகள் அடிக்கடி சாலையை கடக்கும் பகுதிகளில், அதற்கென தனியே மேம்பாலங்கள் அமைப்பது குறித்து பரிசீலித்து வருவதாகவும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment