அருண்ஜெட்லி -விஜய் மல்லையா சந்திப்பு உண்மை…!விஜய் மல்லையா வெளிநாடு தப்பி செல்ல லுக் அவுட் நோட்டீஸ் அதிரடியாக நீக்கப்பட்டது …!உண்மையை உடைத்த பாஜக மூத்த தலைவர்

விஜய் மல்லையாவை 2014 முதல் சந்திக்கவில்லை என ஜெட்லி கூறிய கருத்துக்கு பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி கருத்து தெரிவித்துள்ளார்.

வங்கிகளில் 9 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் வாங்கி விட்டு அதை திரும்பச் செலுத்தாத தொழில் அதிபர் விஜய் மல்லையா, லண்டன் தப்பிச் சென்றார். அவரை நாடு கடத்தக் கோரி இந்திய அரசு தொடர்ந்த வழக்கு லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

Image result for vijay mallya arun jaitley

இந்நிலையில் நேற்று லண்டன் நீதிமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய விஜய் மல்லையா, கடனை திரும்பச் செலுத்த தாம் தயாராக இருந்த போதும் வங்கிகள் அதை ஏற்றுக் கொள்ளாமல், தமது கடன் தீர்வு விண்ணப்பத்திற்கு நீதிமன்றத்தில் ஆட்சேபனை தெரிவித்ததாகவும் கூறினார்.

Image result for vijay mallya arun jaitley

மேலும்  நாட்டை விட்டு வெளியே செல்லும் முன்பு மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியை சந்தித்து நிலைமையை சரி செய்ய முயற்சித்தேன் – விஜய் மல்லையா என்று விஜய் மல்லையா பரபரப்பு தகவல் தெரிவித்தார்.

இதற்கு மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறுகையில்,  2014 ஆண்டு முதல் தற்போது வரை என்னை சந்திக்க விஜய் மல்லையாவுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை  என்று கூறினார்.

Image result for subramanian swamy

இந்நிலையில் பாஜகவின் மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமி இருவரின் சந்திப்பு குறித்தும் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் பதிவிட்ட பதிவில்,மல்லையா தப்பிய விவகாரத்தில் இரண்டு மறுக்க முடியாத உண்மைகள் உள்ளன. முதலாவது விவகாரம் என்னவெனில், மல்லையா 54 பைகளுடன் வெளியேறுவதற்கு வசதியாக அவருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டு இருந்த  லுக் அவுட் நோட்டீஸ் 2014, அக்டோபர் 25 ஆம் தேதி நீர்த்துப்போகச்செய்யப்பட்டது. இரண்டாவது விவகாரம் என்னவெனில்,லண்டன் செல்லும் முன் நாடாளுமன்றத்தின் சென்ட்ரல் ஹாலில் மல்லையாவை அருண்ஜெட்லி சந்தித்தார். இவரது இந்த பதிவு  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment