மக்களின் நலவாழ்வுக்காக அமைச்சர் விஜயபாஸ்கர் செயல்படாமல்!போதைப்பொருள் விற்பனையை அனுமதிக்க மாமூல்!ஸ்டாலின் பரபரப்பு குற்றச்சாட்டு

திமுக செயல் தலைவர் ஸ்டாலின்,உள்ளாட்சி தேர்தல் நடத்தினால் மிகப்பெரிய தோல்வி அடைவோம் என்ற பயத்தின்  காரணமாகவே, தமிழக அரசு தேர்தலை நடத்த முன்வராமல் உள்ளதாக விமர்சித்துள்ளார்

புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுக ஆட்சி காலத்தில் பஞ்சாயத் ராஜ் திட்டத்தின்கீழ், பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட்டதாக குறிப்பிட்டார்.

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மக்களின் நலவாழ்வுக்காக செயல்படாமல், போதைப்பொருள் விற்பனையை அனுமதிக்க மாமூல் பெற்று வருவதாக அவர் குற்றம் சாட்டினார்.

பாஜகவும், அதிமுகவும் இரட்டை குழல் துப்பாக்கி போல செயல்பட்டு வருவதற்கு, நீட் தேர்வு பிரச்சனை சிறந்த எடுத்துக்காட்டு எனவும் ஸ்டாலின் தெரிவித்தார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment