பரபரப்பு …!முதலமைச்சர் இருந்த இல்லத்தில் கத்தியுடன் புகுந்த மர்ம நபர்…!தற்கொலை மிரட்டல்

கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை கத்தியுடன் தாக்க முயன்ற நபரை பாதுகாப்பு அதிகாரிகள் மடக்கி பிடித்தனர்.
டெல்லியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விழா ஓன்று நடைபெறுகிறது.இதில் கலந்து கொள்வதற்காக இன்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் டெல்லி சென்றார்.
அவர் டெல்லியில் உள்ள கேரள  அரசு விருந்தினர் மாளிகையில் தங்கி இருந்தார்.
இன்று காலை அவர் கட்சியின் கூட்டத்திற்கு கலந்து கொள்வதற்காக புறப்பட்டார்.அந்த சமயத்தில் அங்கு பத்திரிக்கையாளார் சந்திப்பு நடைபெற்றது.அங்கு ஏராளமானோர் இருந்தனர்.அந்த இடத்தில் சந்தேகப்படும் விதமாக நபர் ஒருவர் இருந்தார்.பின்னர் அவரை பிடித்து பாதுகாப்பு படையினர்  விசாரித்தனர்.
Image result for kerala special guest home in delhi pinarayi vijayan
விசாரணையில் அந்த கேரள முதலமைச்சரை பார்க்க வேண்டும் என்றும் அனுமதிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்ளுவேன் என்றும் கத்தியை காட்டி அதிகாரிகள் இடம் மிரட்டியுள்ளார்.மேலும் இவர் கேரளாவை  சேர்ந்தவர் என்றும் பெயர் விமல்ராஜ் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.பின்னர் அவர் காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment