தேர்வுத்தாள் மறுமதிப்பீடு முறைகேடு:முன்ஜாமீன் கோரிய  மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்….!

அண்ணா பல்கலைகழக  தேர்வுத்தாள் மறுமதிப்பீடு முறைகேடு வழக்கில் முன்ஜாமீன் முன்ஜாமீன் கோரிய  மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.
கடந்த  ஆகஸ்ட் 1 ஆம் தேதி  அண்ணா பல்கலைக்கழக முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டாளர் உமா உட்பட 10பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.2017 ஏப்ரலில் நடைபெற்ற தேர்வில் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தோரிடம் லஞ்சம் பெற்றதாக வழக்கு தொடரப்பட்டது.பின்னர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில்  அண்ணா பல்கலைகழக  தேர்வுத்தாள் மறுமதிப்பீடு முறைகேடு வழக்கில் முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டாளர் உமா, உதவி பேராசிரியர்கள் அன்புச்செல்வன், மகேஷ் பாபு ஆகிய 3 பேரின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.
DINASUVADU

Leave a Comment