திமுக ஆட்சியை விட, எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி சிறப்பாக உள்ளது! திமுகவுக்கு எதிர்காலம் கிடையாது!சுப்பிரமணியன் சுவாமி

பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை நேரில் சந்தித்து பேசினார். கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

தமிழக ஆளுநர் பன்வாரிலாலை சந்தித்தபின் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி பேசியதாவது, திமுகவை விட அதிமுக ஆட்சி நன்றாக இருக்கிறது. திமுகவுக்கு எதிர்காலம் இல்லை. தமிழக சூழல் குறித்தும், டெல்லியிலிருந்து எனக்கு கிடைத்த தகவல்கள் குறித்தும் ஆலோசித்தோம். தமிழகத்தில் பல பயங்கரவாத சக்திகள், மக்களின் பின்னால் ஒளிந்து கலவரத்தை ஏற்படுத்துகிறார்கள் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment