திண்டுக்கல் அருகே இளைஞர் வெட்டி படுகொலை !

 

குமரேசன் என்பவர்  திண்டுக்கல் அருகே  உள்ள குடைபாறைப்பட்டியைச் சேர்ந்தவர். இவர் ஆட்டு இறைச்சி கடையில் வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு மணிஷா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு லக்சையா என்ற ஒரு வயது குழந்தை உள்ளது.

இவர் மீது கொலை, கொள்ளை என பல வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் இன்று குமரேசன் திண்டுக்கல்  தெற்கு காவல்நிலையம் அருகே உள்ள ஆர்.வி.நகர் 3 வது தெருவில்   நடந்து வந்தபோது அடையாளம் தெரியாத மர்ம கும்பல் மிளகாய் பொடியை குமரேசன் மீது தூவி சரமாரியாக வெட்டியது.

இதில் சம்பவ இடத்திலேயே குமரேசன் பலியானார். சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் குமரேசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து தெற்கு காவல்நிலைய போலிசார் வழக்கு பதிவு செய்து  விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டபகலில் காவல்நிலையத்திலிருந்து 100மீட்டர் தூரத்தில்  வாலிபர் வெட்டி படுகொலைச் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment