தடயவியல் ஆய்வுக்கூடம் அம்பேத்கர் சட்டப்பல்கலையில் அமைக்கப்படும்! அமைச்சர் சி.வி.சண்முகம்

அமைச்சர் சி.வி.சண்முகம்,தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகத்தில் குற்றவியல் சட்டப்பாடம் மற்றும் ஆராய்ச்சி மாணவர்களின் தேவையை பூர்த்தி செய்யும் வண்ண தடயவியல் ஆய்வுக்கூடம் அமைக்கப்படும் என  தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில், மானியக்கோரிக்கைகளை தாக்கல் செய்த அவர், நீதி நிர்வாகம், சிறைத்துறை மற்றும் சட்டத்துறை தொடர்பான 14 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். புதிதாக திறக்கப்பட்ட விழுப்புரம், தேனி மற்றும் தருமபுரி மாவட்ட சிறைகளுக்கு புதிய பணியிடங்கள் தோற்றுவிக்கப்படும் என்றும், உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போலீஸ் கேண்டீன் எனப்படும் காவல்துறை பொருள் வழங்கீட்டு மையத்தில், சிறைத்துறை அமைச்சுப் பணியாளர்களும் பொருள் வாங்க ஆணை வழங்கப்படும் என்றும், கோவை, திருச்சி, சேலம் மற்றும் கடலூர் மத்திய சிறைகளில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment