டி.டி.வி தினகரன் குடும்பத்தினருடன் நடராஜன் உடலுக்கு அஞ்சலி !

நடராஜனின் உடலுக்கு ஆர்.கே நகர் சட்டமன்ற உறுப்பினரும் சசிகலாவின் உறவினருமான டி.டி.வி தினகரன் தனது குடும்பத்தினருடன் அஞ்சலி செலுத்தினார்.

உடல்நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் சசிகலாவின் கணவரும், புதிய பார்வை ஆசிரியருமான ம.நடராசன்  மரணமடைந்தார். இதனையடுத்து, அவரின் உடல் எம்பார்மிங் செய்யப்படுவதற்காக போரூர் தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளது. எம்பார்மிங்க்கு பின், சென்னை பெசன்ட் நகரில் உள்ள அவரின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.பெசன்ட் நகர் வீட்டில்   அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நடராஜனின் உடலுக்கு ஆர்.கே நகர் சட்டமன்ற உறுப்பினரும் சசிகலாவின் உறவினருமான டி.டி.வி தினகரன் தனது குடும்பத்தினருடன் அஞ்சலி செலுத்தினார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment