செயின்பறிப்பிற்கு சென்னையில் புதிய உத்தியை கையாண்ட இளைஞர்களை பொதுமக்கள் பிடித்து காவல்துறையில் ஒப்படைத்தனர். சிந்தாதிரிப்பேட்டை மீன்மார்க்கெட் அருகே நடந்து சென்ற பெண் ஒருவரை இருசக்கரவாகனத்தில் சென்ற இளைஞர்கள் இடித்து தள்ளி விட்டு செயின் பறிக்க முயன்றனர். இதனையடுத்து பொதுமக்கள் அவர்களைப் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
விசாரணையில் அவர்கள் ஐஸ் அவுஸ் பகுதியைச் சேர்ந்த அன்பரசு மற்றும் ராஜேஷ் என்பது தெரியவந்தது. இருசக்கர வாகனத்தில் செல்லும் இவர்கள் சாலையில் நகை அணிந்து செல்பவர்கள் மீது மோதி விடுவதாகவும், கீழே விழுந்தவர்களுக்கு உதவி செய்வது போன்று நடித்து செயினை பறித்துச் செல்வதாகவும் கூறியுள்ளனர். இருவரிடமிருந்தும் 6 மொபைல் போன்கள், 5 சவரன் நகை, இருசக்கரவாகனம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.