கோவையில் மாணவி மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்தது தொடர்பாக பயிற்சியாளர் கைது!

கோவையில் மாணவி மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்தது தொடர்பாக பயிற்சியாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று  பேரிடர் மேலாண்மை பயிற்சியின்போது கோயம்புத்தூரில் அருகே நரசிபுரத்தில் தனியார் கல்லூரியில் மாணவி உயிரிழந்தார். 2ஆவது மாடியில் இருந்து பாதுகாப்பு கயிறு கட்டாமல் பயிற்சியாளர் தள்ளியதில் லோகேஸ்வரி உயிரிழந்ததாக புகார் தெரிவிக்கப்பட்டது. மாணவியை பிடிப்பதற்காக மாணவர்கள் வலையுடன் இருந்தபோது சன்ஷேடில் அடிபட்டு உயிரிழந்தார்.

இந்நிலையில்  மாணவி மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்தது தொடர்பாக பயிற்சியாளர் ஆறுமுகம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மாணவியின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.பின்னர் இந்த வழக்கின் அடிப்படையில் பயிற்சியாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment