கோபாலபுரத்தில் இருந்து பத்திரிக்கையாளர்கள் வெளியேற வேண்டும்! துரைமுருகன்

திமுக தலைவர் கருணாநிதி நலமாக உள்ளார் என்று  துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் முதல் கருணாநிதியின் உடல் நிலை குறித்து செய்திகள் எடுக்க கோபாலபுரத்தில் செய்தியாளர்கள் குவிந்த வண்ணமே உள்ளனர்.

நேற்று இரவு கருணாநிதி இல்லமான கோபாலபுரத்திற்கு ஆம்புலன்ஸ் கொண்டு வரப்பட்டது.பின்னர் காவேரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப் செல்லப்பட்டார் திமுக தலைவர் கருணாநிதி.

இதன் பின்னர் எதிர்கட்சித் துணைத்தலைவர் துரைமுருகன் , திமுக தலைவர் கருணாநிதி நலமாக உள்ளார்.மேலும் கோபாலபுரத்தில் இருந்து பத்திரிக்கையாளர்கள் வெளியேற வேண்டும் என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment