கர்நாடகா தேர்தலை மனதில் கொண்டு காவிரி விவகாரத்தில் மத்திய அரசு நாடகமாடுகிறது..!

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன்  கர்நாடக தேர்தலை மனதில் கொண்டு காவிரி விவகாரத்தில் மத்திய அரசு நாடகமாடுவதாக குற்றம்சாட்டியுள்ளனர்.

இது தொடர்பாக தமது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள கமல்ஹாசன், பாகிஸ்தானோடு, வங்கதேசத்தோடு நதி நீரைப் பகிர்ந்து கொள்ளும் இந்தியா,  தன் நாட்டுக்குள் தமிழகத்திற்கும் கர்நாடகத்திற்கும் காவிரி நீரைப் பகிர்ந்து தர முடியாதா எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது இயலாமை அல்ல என்றும் இழிவான அரசியல் என்றும் விமர்சித்துள்ளார்.   கர்நாடகத்து நாற்காலிக்காக நடத்தும் நாடகம் என மத்தியில் ஆளும் பாஜக அரசு மீது கமல்ஹாசன் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment