ஏபிவிபி அமைப்பினர் காங்கிரஸ் கட்சியின் மாணவர் பிரிவு தலைவர் மீது பாலியல் புகார், நடவடிக்கை எடுக்க கோரி ஆர்ப்பாட்டம்!

பாஜக மாணவர் அணியினரை டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் , போலீசார் தடியடி நடத்தி விரட்டினர்.

காங்கிரஸ் கட்சியின் மாணவர் பிரிவான தேசிய மாணவர் சங்க தலைவர் ஃபைரோஸ் கான் மீது, சத்தீஷ்கரை சேர்ந்த பெண் ஒருவர் பாலியல் புகார் கூறியிருந்தார். இது தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்து இருந்தது. இந்த நிலையில் ஃபைரோஸ் கான் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாஜக மாணவர் பிரிவான ஏபிவிபி அமைப்பினர் போராட்டம் நடத்தினர். சாலை மறியலில் ஈடுபட்ட அவர்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டினர்.

Leave a Comment