15 நாளுக்கு ஒருமுறை மத்திய அரசின் எண்ணெய் நிறுவனங்கள் அதன் விலையில் மாற்றம் செய்து வந்தன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையை பொறுத்து அதன் விலையை உயர்த்தியோ அல்லது குறைத்தோ வந்தன.
பின்னர் தினமும் அதன் விலையில் மாற்றம் கொண்டு வர தொடங்கின. கடந்த ஒரு ஆண்டில் மட்டும் பெட்ரோல்–டீசல் விலை ரூ.10 உயர்ந்து உள்ளது. தினந்தோறும் அவற்றின் விலையில் மாற்றம் ஏற்படுவதால், லாரி வாடகை உள்பட பொருட்களை ஏற்றிச்செல்லும் வாகனங்களில் வாடகையிலும் மாற்றம் ஏற்பட்டு வருகிறது.
மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறுகையில் சர்வதேச விலை நிலவரத்தை அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது, சுதந்திர சந்தைவிலை நிர்ணயம் என்பதில் இருந்து பின்வாங்கப்போது கிடையாது என்று கூறிவிட்டார்.
டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், பெட்ரோல் மற்றும் டீசல் விலையானது ஜிஎஸ்டி
வரிவிதிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டால் பயனாளர்கள் பயன்அடைவார்கள் என்றார்.
இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலையை உயர்த்த வேண்டாம் என எண்ணெய் நிறுவனங்களை அரசு கேட்டுக்கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. பெட்ரோலிய நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்த வேண்டாம் மற்றும் சர்வதேச சந்தையில் விலையேற்றம் காரணமாக எழும் நஷ்டத்தில் ஒருபங்கை ஏற்றுக்கொள்ளுங்கள் என எண்ணெய் நிறுவனங்களை அரசு கேட்டுக்கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஜிஎஸ்டி வரிவிதிப்பு வருவாய் மந்தமான நிலையை அடைந்த நிலையில் உற்பத்தி வரியை குறைக்கும் வாய்ப்பும் இல்லை எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
C.V.Ananda Bose : மேற்கு வங்க ஆளுநருக்கு எதிராக பாலியல் புகார் பதியப்பட்டுள்ளதாகவும், அதுகுறித்த விசாரணை நடைபெற்று வருவதாகவும் கொல்கத்தா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேற்கு வங்க ஆளுநர்…
Finger nails-நம்முடைய நகங்கள் மூலம் நாம் உள் உறுப்புகள் ஆரோக்கியமாக உள்ளதா என்பதை பற்றி இப்பதிவில் அறியலாம். நகம் என்பது நம்முடைய விரல் நுனிகளை பாதுகாக்கும் கவசமாகும்.…
Madonna Sebastian : பிரேமம் படத்தில் நடித்தபோது போஸ்டரில் கூட வரமாட்டீர்கள் என்று படக்குழு கூறியதாக மடோனா செபாஸ்டியன் தெரிவித்துள்ளார். பிரேமம் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மக்களுக்கு…
Types of Duck Out : கிரிக்கெட்டில் நமக்கு தெரிந்த ஒரு சில டக் அவுட்களையும் தாண்டி பல பெயர்களில் பல வித டக் அவுட் இருக்கிறது…
Kollam Express : ரயிலில் தவறி விழுந்து உயிரிழந்த கர்ப்பிணி கஸ்தூரியின் பிரேத பரிசோதனையில் அவருக்கு 7 மாத ஆண் குழந்தை வயிற்றில் இருந்தது தெரியவந்தது. சென்னையில்…
Iswarya Menon : பட வாய்ப்புக்காக நான் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடவில்லை என நடிகை ஐஸ்வர்யா மேனன் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் காதலில் சோதப்புவது யெப்படி, தீய…