இறக்குமதி மணலை விற்பனை செய்ய அனுமதிக்க முடியாது…! உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு…!

தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் இறக்குமதி மணலை விற்பனை செய்ய அனுமதிக்க முடியாது என  தெரிவித்துள்ளது.

மலேசியாவில் இருந்து தூத்துக்குடி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்ட மணலை விற்பனை செய்ய தமிழக அரசு தடைவிதித்த வழக்கில், மணல் குவாரிகளை மூட உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் மணல் குவாரிகள் 6 மாதங்களில் மூட உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில், வெளிநாட்டு மணலை விற்பனை  செய்வது குறித்து தமிழக அரசு பதில் மனுத்தாக்கல் செய்து உள்ளது. இந்த மனுவில் வெளிநாட்டு மணலாக இருந்தாலும் மாநில விதிகளுக்கு உட்பட வேண்டுமென்றும், தமிழகத்தில் வெளிநாட்டு மணல் விற்பனைக்கு தனியாரை அனுமதிக்க முடியாது என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment