அனைத்துக் கட்சி தலைவர்களை ஒன்றுதிரட்டி திமுக தலைமையில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்!மு.க.ஸ்டாலின்

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில் மத்திய அரசு சுணக்கம் காட்டுமேயானால் தமிழகம் இதுவரை கண்டிராத அளவிற்கு அனைத்துக் கட்சி தலைவர்களை ஒன்றுதிரட்டி திமுக தலைமையில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என மனிதச் சங்கிலி போராட்டத்திற்குப் பிறகு  கூறினார்.

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தற்போது நடைபெற்ற மனிதச் சங்கிலி , உணர்வு சங்கிலியாகவும், உரிமை சங்கிலியாகவும் அமைந்ததாகவும் கூறினார். மேலும், எரிபொருள் விலையேற்றம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், பாஜக ஆட்சியில் பெட்ரோல், டீசல் விலை உயரவில்லை என்றால்தான் ஆச்சர்யம் என்றார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment