அதிமுக மட்டும் தான் காவிரி பிரச்சனைக்காக உண்மையாக குரல் கொடுக்கின்றது!முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ,காவிரி பிரச்சனைக்காக உண்மையாக குரல் கொடுக்கும் ஒரே இயக்கம் அ.தி.மு.க. தான் என்று தெரிவித்துள்ளார்.

திருச்சி சென்ற முதலமைச்சருக்கு விமான நிலையத்தில் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனைத் தொடர்ந்து சுப்பிரமணியபுரம் பகுதியில் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தை திறந்து வைத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார். எதிர்க்கட்சியினர் நாள்தோறும் போராட்டங்களை தூண்டி வருவதாக குற்றம் சாட்டிய முதலமைச்சர், சோதனைகளை சாதனைகளாக மாற்றுவோம் என்று கூறினார்.

அ.தி.மு.க. அலுவலக திறப்பு விழா நிகழ்ச்சியில் அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, சி.வி.சண்முகம் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment