அதிமுக தோற்றுவிடும் என்பதாலேயே உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் தள்ளிப்போட்டு வருகிறது! ஸ்டாலின்

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ,ஆளுங்கட்சி தோற்றுவிடும் என்பதாலேயே உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் தள்ளிப்போட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் காமராஜர் புரத்துக்குச் சென்ற அவர் பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்தார்.

குடிநீருக்குத் தட்டுப்பாடு நிலவுவதாகவும் ஒரு குடம் 6ரூபாய் என்கிற விலைக்குத் தண்ணீரை விலைகொடுத்து வாங்குவதாக அவரிடம் பொதுமக்கள் தெரிவித்தனர். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், அனைத்து ஊழல்களையும் அதிமுகவும் பாஜகவும் இணைந்தே செய்வதாகக் குற்றஞ்சாட்டினார். ஆளுங்கட்சி தோற்றுவிடும் என்பதாலேயே உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் தள்ளிப்போட்டு வருவதாகத் தெரிவித்தார்.

தமிழக மக்கள் நலவாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், பணம் பெற்றுக்கொண்டு குட்கா, புகையிலை ஆகியவற்றை விற்க அனுமதித்து மக்கள் நலவாழ்வுக்கு எதிரான அமைச்சராகத் திகழ்வதாகவும் ஸ்டாலின் தெரிவித்தார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment