உக்ரைனின் கெர்சன் நகரின் மீது ஏவுகணை மழை பொழியும் ரஷ்யா.!

தெற்கு உக்ரைனில் அண்மையில் விடுவிக்கப்பட்ட கெர்சன் நகரின் மீது ரஷ்யப் படைகள் மோட்டார் மற்றும் பீரங்கித் தாக்குதல்களை முடுக்கிவிட்டுள்ளதாக உக்ரைன் இராணுவம் புதன்கிழமை தெரிவித்துள்ளது. கிழக்கு உக்ரைனில் ரஷ்யா தொடர்ந்து அழுத்தத்தை பிரயோகித்து வருவதாகவும் ரஷ்யா 24 மணி நேரத்தில் கெர்சனில் உள்ள பொதுமக்களின் இருப்பிடங்களை  நோக்கி பல ராக்கெட் லாஞ்சர்களில் இருந்து 33 ஏவுகணைகளை ஏவியுள்ளதாக ராணுவம் கூறியுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

#Ukraine War: 600 ரஷ்ய போர்க்குற்றவாளிகளை அடையாளம் கண்டுள்ளோம் – உக்ரைன்

உக்ரைன் 600 க்கும் மேற்பட்ட ரஷ்ய போர்க்குற்ற சந்தேக நபர்களை அடையாளம் கண்டுள்ளது மற்றும் அவர்களில் 80 பேர் மீது வழக்குத் தொடரத் தொடங்கியுள்ளதாக கிய்வின் உயர்மட்ட வழக்கறிஞர் செவ்வாயன்று தெரிவித்தார். சந்தேக நபர்களின் பட்டியலில் “ரஷ்யாவின் உயர்மட்ட இராணுவம், அரசியல்வாதிகள் மற்றும் பிரச்சார முகவர்கள்” உள்ளடங்குகின்றனர் என்று, வழக்கறிஞர் ஜெனரல் இரினா வெனிடிக்டோவா ஹேக்கில் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார். எஸ்தோனியா, லாட்வியா மற்றும் ஸ்லோவாக்கியா ஆகியவை  உக்ரைனில் உள்ள சர்வதேச விசாரணைக் குழுவில் சேர முடிவு … Read more

#Breaking : 2022 விம்பிள்டன் டென்னிஸ் – ரஷ்யா, பெலாரஸ் வீரர்களுக்கு தடை…!

உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து போரிட்டு வரும் நிலையில், 2022 விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் பங்கேற்க ரஷ்யா மற்றும் பெலாரஸ் ஆகிய இரு நாடுகளுக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து போரிட்டு வரும்  நிலையில், இந்தப் போரை நிறுத்துமாறு பிற நாடுகள் அறிவித்து வருகின்றன. ஆனால் தொடர்ந்து போர் நடந்து வரும் நிலையில், ரஷ்யா மீது பிற நாடுகள் பொருளாதார ரீதியாக மட்டுமல்லாமல், பல வழிகளில் தடைகளை விதித்து வருகிறது. இந்த நிலையில் விம்பிள்டன் டென்னிஸ் … Read more

உக்ரைன் – ரஷ்யா போர் : மூழ்கிய ரஷ்யாவின் மோஸ்க்வா போர்க்கப்பல்…!

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையில் தொடர்ந்து போர் நிலவி வரும் நிலையில், தற்போது ரஷ்யாவிற்கு எதிராக உக்ரைன் நடத்திய தாக்குதலில்  ரஷ்யாவின் மோஸ்க்வா எனும் போர்க் கப்பல் தீப்பிடித்து மூழ்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த போரில் இதுவரை 500 பீரங்கிகள், 82 போர் விமானங்கள், இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட ராணுவ வாகனங்கள் ஆகியவற்றை தங்கள் இழந்துள்ளதாகவும் ரஷ்யா சார்பில்  கூறப்படுகிறது. தற்பொழுதும் கடலில் மூழ்கியுள்ள ரஷ்யாவின் இந்த பிரமாண்டமான போர்க்கப்பல் குறித்து உக்ரைன் தரப்பில் கூறும்போது, தங்கள் ஏவுகணை … Read more

உக்ரைனுக்கான புதிய இந்திய தூதரக ஹர்ஷ் பொறுப்பேற்பு..!

ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கிடையில் போர் நிலவி வரும் நிலையில், போலந்தில் உள்ள வார்சாவில் தற்பொழுது தூதரகங்கள் செயல் பட்டு வருகிறது. முன்னதாக இந்திய தூதராக பார்த்த சாத்பதி பணியாற்றி வந்த நிலையில், தற்போது ஹர்ஷ் குமார் ஜெயின் அவர்கள் புதிய இந்திய தூதராக பொறுப்பேற்றுள்ளார். மேலும் தூதரகம் செயல்பட்டு வரும் வர்ஷாவுக்கு புதிய தூதர் ஜெயின் அவர்கள் சென்றுள்ளார். அவரை தூதரக பொறுப்பாளர் அம்பரீஷ் வெமுரி வரவேற்றுள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் … Read more

போரை மனிதகுலம் அழிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது – போப் பிரான்சிஸ்

வாடிகனில், ஆயிரக்கணக்கான மக்களிடையே உரையாற்றிய போப் பிரான்சிஸ், உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு, உலக மோதலுக்கு வழிவகுத்து வருவதாக வேதனை தெரிவித்துள்ளார். உக்ரைன் – ரஷ்யா இடையே கடந்த மாதம் 24-ஆம் தேதி முதல் போர் நடைபெற்று வருகிறது. இந்த போரால் பலர் உயிரிழந்துள்ள நிலையில், லட்சக்கணக்கான மக்கள் பிற நாடுகளுக்கு அகதிகளாக சென்றுள்ளனர். இந்த நிலையில், உக்ரைன் – ரஷ்யா இடையே இதுவரை பெலாரசில் மூன்று கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் சுமுகமான முடிவு ஏதும் எட்டப்படாததால், … Read more

#Breaking:தொடங்கியது போர்…உக்ரைன் மீது குண்டு மழை பொழியும் ரஷ்யா!

உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் கிழக்கு உக்ரைன் டோனட்ஸ்க் நகரில் ரஷ்ய படைகள் தாக்குதல்களை தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நேட்டோ அமைப்பில் இணைய உக்ரைன் ஆர்வம் காட்டும் நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேட்டோ கூட்டமைப்பில் உக்ரைன் இணைவதை தடுக்க ரஷ்யா, அந்நாட்டின் மீது போர் தொடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. இதற்கிடையில்,ரஷ்யா – உக்ரைன் இடையே நிலவும் போர் பதற்றத்தை குறைக்க அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட உலக நாடுகள் முயற்சி செய்து வரும் நிலையில், … Read more

வீணானது ரஷ்யாவின் முயற்சி.. அர்மீனியா – அஜர்பைஜான் இடையே மீண்டும் மோதல்!

ரஷ்ய அதிபர் புதின் நடத்திய ஆலோசனைக்கு பிறகு அர்மீனியா – அஜர்பைஜான் இடையே சண்டை நிறுத்திய நிலையில், 24 மணிநேரதிற்குள் மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டது. முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளான அஜர்பைஜான் மற்றும் ஆர்மேனியாவின் எல்லையில் உள்ள நகோர்னோ-கராபத் பகுதிகளை 1994 ஆம் ஆண்டில் நடைபெற்ற போரில் அர்மீனியா கைப்பற்றியது. மேலும், அந்த மாகாணத்திற்கு தன்னாட்சி அதிகாரமும் வழங்கப்பட்டது. இதையடுத்து, அந்த மாகாணத்தை அர்மீனியா ஆதரவு மக்கள் வசித்து வந்தனர். அதற்கான உதவிகளை அர்மீனியா நாட்டு அரசு … Read more

“போர் மண்டலத்திற்கு வெளியே உள்ள நகரங்களை அர்மீனியா தாக்குகிறது” – அஜர்பைஜான் குற்றசாட்டு!

போர் மண்டலத்திற்கு வெளியே உள்ள நகரங்களை ஆர்மீனியா குறிவைத்து தாக்குவதாக அஜர்பைஜான் குற்றம்சாட்டியுள்ளது. நகோர்னோ-கராபத் பகுதிகளை 1994 ஆம் ஆண்டில் நடைபெற்ற போரில் அர்மீனியா கைப்பற்றியது. மேலும், அந்த மாகாணத்திற்கு தன்னாட்சி அதிகாரமும் வழங்கப்பட்டது. இதையடுத்து, அந்த மாகாணத்தை அர்மீனியா ஆதரவு மக்கள் வசித்து வந்தனர். அதற்கான உதவிகளை அர்மீனியா நாட்டு அரசு செய்துவந்தது. அசர்பைஜான் ராணுவத்தினர், நகோர்னோ-கராபத் பகுதிகளில் கடந்த 27 ஆம் தேதி திடீரென தாக்குதல் நடத்தினார்கள். அந்த தாக்குதலுக்கு பதிலடியாக நகோர்னோ-கராபத் மாகாணத்தில் … Read more

6 ஆம் நாளாக அர்மீனியா – அசர்பைஜான் இடையிலாக நீடிக்கும் போர்.. அசர்பைஜானுக்கு ஆதரவாக களமிறங்கிய துருக்கி!

அர்மீனியா – அசர்பைஜான் இடையிலான மோதல் போராக மாறிய நிலையில், அது 6 ஆம் நாளாக நடைபெற்று வருகிறது. இந்த போரில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 1994 ஆம் ஆண்டில் நடைபெற்ற போரில் நகோர்னோ – கராபக்கின் பெரும்பாலான பகுதிகளை அர்மீனியா கைப்பற்றியது. மேலும், அந்த மாகாணத்திற்கு தன்னாட்சி அதிகாரமும் வழங்கப்பட்டது. இதையடுத்து, அந்த மாகாணத்தை அர்மீனியா ஆதரவு மக்கள் வசித்து வந்தனர். அதற்கான உதவிகளை அர்மீனியா நாட்டு அரசு செய்துவந்தது. அர்மீனியாவின் கட்டுப்பாட்டில் உள்ள நகோர்னோ-கராபத் … Read more