ஜம்மு காஷ்மீரில் புலம்பெயர்ந்த தொழிலாளி பயங்கரவாதிகளால் சுட்டுக் கொலை.!

TerroristsAttack

ஜம்மு காஷ்மீர்: புல்வாமாவின் தும்சி நவ்போரா பகுதியில் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் பலத்தக் காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த தாக்குதலைத் தொடர்ந்து அப்பகுதியை போலீசார் சுற்றி வளைத்துள்ளனர். இந்த சம்பவத்தையடுத்து புல்வாமா மற்றும் ஜம்மு காஷ்மீரின் பிற பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வாகனங்கள் மற்றும் சந்தேகத்திற்குரிய நபர்கள் மீது பாதுகாப்புப் படையினர் சோதனையை தீவிரப்படுத்தியுள்ளனர். மேலும், தொழிலாளி ஒருவர் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட இச்சம்பவம் … Read more

புல்வாமா என்கவுண்டரில் பயங்கரவாதி சுட்டு கொலை..!

தெற்கு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள நைனா படபோரா பகுதியில் இன்று நடைபெற்ற என்கவுன்டரில் தீவிரவாதி ஒருவர் கொல்லப்பட்டார். தெற்கு காஷ்மீரில் உள்ள நைனா பட்போரா பகுதியில் தீவிரவாதிகள் இருப்பதாக கிடைத்த தகவல் பேரில், பாதுகாப்புப் படையினர் அங்கு சுற்றிவளைத்துத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, பாதுகாப்புப் படையினர் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதற்கு பாதுகாப்புப் படையினரும் பதிலுக்கு துப்பாக்கிச்சூடு நடத்தியபோது  அடையாளம் தெரியாத  ஒரு தீவிரவாதி சுட்டு கொல்லப்பட்டார். #PulwamaEncounterUpdate: 01 #terrorist killed. #Operation going on. Further details shall follow. … Read more

புல்வாமா என்கவுன்டரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை..!

புல்வாமாவில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில் ஒரு தீவிரவாதி சுட்டுக்கொல்லப்பட்டார். ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவின் ராஜ்புரா பகுதியில் உள்ள உஸ்காம் பத்ரியில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நள்ளிரவு என்கவுன்டர் தொடங்கியது. இந்நிலையில், புல்வாமாவில் இன்று அதிகாலை பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில் ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார் என்று போலீசார் தெரிவித்தனர். மேலும், என்கவுன்டர் இன்னும் தொடர்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. புல்வாமாவில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில் ஜெய்ஷ்-இ-முகமது  பயங்கரவாதி கொல்லப்பட்டார் என தகவல் … Read more

காஷ்மீரில் வெடிகுண்டு தாக்குதல்..!-3 பேர் படுகாயம்..!

ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகளின் கையெறி குண்டு தாக்குதலுக்கு 3 பொதுமக்கள் படுகாயம் அடைந்துள்ளனர். சமீப காலமாக காஷ்மீரில் தீவிரவாதிகள் கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர். ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் இன்று பாதுகாப்புப் படையினர் மீது தீவிரவாதிகள் நடத்திய கையெறி குண்டு தாக்குதலில் 3 பொதுமக்கள் காயமடைந்துள்ளனர். இன்று பிற்பகல் புல்வாமா சவுக் பகுதியில் பாதுகாப்புப் படையின் வாகனத்தை நோக்கி தீவிரவாதிகள் கையெறி குண்டுகளை வீசியுள்ளனர். ஆனால்  வெடிகுண்டு சாலையோரத்தில் விழுந்து வெடித்துள்ளது. இதனால் அங்கிருந்த பொதுமக்களில் … Read more

ஜம்மு காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை…!

ஜம்மு காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொலை. தெற்கு காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக  ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசாரும், பாதுகாப்பு படையினரும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில், அடையாளம் தெரியாத 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். பின்னர்,  அந்த பகுதியில் போலீசாரும், பாதுகாப்பு படையினரும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். பாகிஸ்தானை சேர்ந்த மூன்று லஷ்கர்-இ-தைபா பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக … Read more

புல்வாமாவில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை..!

புல்வாமா மாவட்டத்தில் இன்று  அடையாளம் தெரியாத இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தின் டிக்கன் பகுதியில் பயங்கரவாதிகள் இருப்பதாக தகவல் கிடைத்ததை தொடர்ந்து, பாதுகாப்புப் படையினர் இன்று அதிகாலை தேடுதல் வேட்டையில் மேற்கொண்டனர்.  அப்போது,  பாதுகாப்புப் படையினர் மற்றும் பயங்கரவாதிகள் இடையே ஏற்பட்ட மோதலில்  அடையாளம் தெரியாத இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். மேலும், இந்த துப்பாக்கிச் சண்டையில் உள்ளூரை சார்ந்த ஒருவருக்கு காயம் ஏற்பட்டது என காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். … Read more

புல்வாமாவில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை..!

புல்வாமா மாவட்டத்தில் இன்று  நடந்த மோதலில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். புல்வாமாவின் ஹக்ரிபோரா / ககாபோரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலுக்கு பின்னர் அந்தப் பகுதியை  இந்திய ராணுவம், மத்திய ரிசர்வ் போலீஸ் படை மற்றும் ஜம்மு-காஷ்மீர் காவல்துறை சுற்றி வளைத்தனர். அப்போது, ஏற்பட்டமோதலில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக காஷ்மீர் மண்டல காவல்துறை ட்விட்டரில் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் ஜம்மு-காஷ்மீரில் நடந்த இரண்டாவது சண்டை இதுவாகும். தெற்கு காஷ்மீரின் சோபியன் … Read more

புல்வமாவில் பயங்கரவாதிகள் தாக்குதல்.. ராணுவ வீரர் காயம்.!

ஜம்மு காஷ்மீரின் புல்வமா மாவட்டத்தில் உள்ள கம்ரசிபோரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, தகவல் கிடைத்த இடத்திற்கு பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து திவீர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு இருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை மீது துப்பாக்கியால் சுட்டனர். இதனால், இரு தரப்பினருக்கும் இடையே  துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. இந்த மோதலில் ராணுவ வீரர் காயம் அடைந்தார், பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இதை தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் … Read more

புல்வாமாவில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொலை.!

ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவில் நடந்த மோதலில் ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டதாக காஷ்மீர் மண்டல காவல்துறை தெரிவித்துள்ளது. புல்வாமாவின் கம்ராசிபோரா கிராமத்தில் உள்ள ஒரு பழத்தோட்டத்தில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் அதிகாலை ஈடுப்பட்டனர். அப்போது, அதிகாரிகள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், இரண்டு வீரர்கள் காயமடைந்ததை அடுத்து காயமடைந்தவர்கள் ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்நிலையில், பின்னர் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் நடந்த துப்பாக்கி சூட்டில் அடையாளம் தெரியாத பயங்கரவாதி ஒருவர்  சுட்டுக் கொல்லப்பட்டார்.

மீண்டும் புல்வாமாவில் தீவிரவாத தாக்குதல் – முறியடித்த இந்திய பாதுகாப்பு படை.!

தொடர்ந்து காஸ்மீரில் புல்வாமா பகுதியில் தீவிரவாத தாக்குதல் முயற்சி முறியடுக்கப்பட்டுள்ளது.  காஸ்மீரில் நேற்று சோதனை சாவடி ஒன்றில் பாதுகாப்பு படைவீரர்கள் பரிசோதனை நடத்திக்கொண்டிருந்த போது, அந்த பகுதியில் வந்த வாகனங்களை ஒன்று ஒன்றாக சோதனையிட்டு கொண்டிருந்தனர். அப்போது வெள்ளை நிற கார் ஒன்றை ஒட்டி வந்த சந்தேகத்திற்கு இடமான ஓட்டுநர், அவர்களை தாண்டி செல்ல முயற்சிருக்கிறார். அப்போது அவரை பாதுகாப்பு படை வீரர்கள் தடுத்து இருக்கிறார்கள். அந்த காரை ஒட்டி வந்த ஓட்டுநர் உடனடியாக அந்த இடத்திலேயே … Read more