புல்வாமாவில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை..!

புல்வாமா மாவட்டத்தில் இன்று  நடந்த மோதலில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

புல்வாமாவின் ஹக்ரிபோரா / ககாபோரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலுக்கு பின்னர் அந்தப் பகுதியை  இந்திய ராணுவம், மத்திய ரிசர்வ் போலீஸ் படை மற்றும் ஜம்மு-காஷ்மீர் காவல்துறை சுற்றி வளைத்தனர்.

அப்போது, ஏற்பட்டமோதலில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக காஷ்மீர் மண்டல காவல்துறை ட்விட்டரில் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் ஜம்மு-காஷ்மீரில் நடந்த இரண்டாவது சண்டை இதுவாகும்.

தெற்கு காஷ்மீரின் சோபியன் மாவட்டத்தில் மெல்ஹோரா பகுதியில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். ஜம்மு-காஷ்மீரில் கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan