100 கோடிக்கும் அதிகமாக கிரிக்கெட் ரசிகர்கள்!ஐசிசி ஆய்வில் ருசீகர தகவல்!

ஐசிசி நடத்திய சந்தை ஆய்வில் உலகம் முழுதும் கிரிக்கெட்டுக்கு எத்தனை ஆதரவு இருக்கிறது என்று  சுமார் 100 கோடிக்கும் அதிகமாக கிரிக்கெட்டை ரசிகர்கள் விரும்புவது தெரியவந்துள்ளது, இதில் 90% துணைக்கண்ட ரசிகர்கள். ரசிகைகளின் எண்ணிக்கை 39%. 14 நாடுகளில் சுமார் 1 பில்லியன் பேர் கிரிக்கெட்டுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர், இதில் 90% துணைக்கண்ட ரசிகர்கள். 100கோடிக்கும் மேல் கிரிக்கெட் ரசிகர்கள் உலகம் முழுதும் உள்ளனர்கள் . 300 மில்லியன் பங்கேற்பாளர்கள், 39% பேர் ரசிகைகள் என்பது ஐசிசி உற்சாக அறிக்கை … Read more

இங்கிலாந்தை பழிதீர்த்த இந்திய அணி!அகர்வால் தொடர்ச்சியாக அடிக்கும் 2-வது சதம்!

இந்திய ஏ அணி லீசெஸ்டரில் நடந்த முத்தரப்பு ஒருநாள் தொடரில் வலிமையான இங்கிலாந்து லயன்ஸ் அணியை 102 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது மயங்க் அகர்வால்  முத்தரப்பு ஒருநாள் தொடரில் தொடர்ச்சியாக அடிக்கும் 2-வது சதமாகும். இதற்கு முந்தைய போட்டியில் மே.இ.தீவுகள் ஏ அணிக்கு எதிராகச் சதம் அடித்திருந்தார். 104 பந்துகளைச் சந்தித்த அகர்வால் 112 ரன்களில் ஆட்டமிழந்தார். இதில் 4 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகள் அடங்கும். அவருக்குத் துணையாக ஆடிய சுப்மான் கில் 72 ரன்களும், விகாரி … Read more

யோ-யோ டெஸ்ட் ஒன்னும் அப்படி இல்ல!யோ-யோவை கண்டுபிடித்தவர் ஜென்ஸ் பேங்ஸ்போ கருத்து

யோ-யோவை கண்டுபிடித்த டென்மார்க் விளையாட்டு, உடற்தகுதி நிபுணர் டாக்டர் ஜென்ஸ் பேங்ஸ்போ,இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்கள் தேர்வுக்கு மிகப்பெரிய தகுதியாக யோ-யோ டெஸ்ட் வைக்கப்பட்டுள்ளது குறித்து விளக்கமளித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் இயக்குனர் ரவிசாஸ்திரி, யோ-யோ டெஸ்ட் வேண்டாமென்றால் போங்கள் என்று  கூற மற்றவர்களும் அணித்தேர்வுக்கு அடிப்படைத் தகுதியாக கிரிக்கெட்டில் யோ-யோவைக் கொண்டு வருவது பற்றி கடும் விமர்சனங்களை வைத்து வருகின்றனர். யோ-யோவை கண்டுபிடித்த டென்மார்க் விளையாட்டு, உடற்தகுதி நிபுணர் டாக்டர் ஜென்ஸ் பேங்ஸ்போ கூறுகையில்,ஒரு குறிப்பிட்ட விளையாட்டுப் … Read more

சச்சின் டெண்டுல்கரின் மகள் சாராவின் இன்ஸ்டாகிராம் பதிவுக்கு அவர் அளித்த பதில் பதிவு கிரிக்கெட் ரசிகர்களை அன்பு மழையில் நனையச் செய்துள்ளது ..!

ஒவ்வொரு தந்தைக்கும் அவர்களது பெண் குழந்தைகளிடம் அளவு கடந்த அன்பிருக்கும் என்று கூறலாம். அதே போல் தான் சச்சின் டெண்டுல்கருக்கும். தந்தையர் தினத்தன்று சச்சினின் மூத்த மகளான சாரா டெண்டுல்கர் இன்ஸ்டாகிராம் தளத்தில் தனது அப்பாவுடன் எடுத்த பழைய புகைப்படம் ஒன்றை பதிவு செய்து, அதில் பாதுகாப்பான, பாசமிகு  தந்தையாகவும் விளங்கி வருவதாக குறிப்பிட்டிருந்தார். அதற்கு பதிலளிக்கும் வகையில் சச்சின் பதிவிட்டது கிரிக்கெட் பிரியர்களை மகிழ்ச்சியில் மூழ்கடித்துள்ளது. அதில், ‘அர்ஜூன் மற்றும் நீ என் வாழ்க்கையில் கிடைத்த … Read more

இங்கிலாந்து அணியின் மோசமான ஆட்டத்தால் ஐ.சி.சி தரவரிசையில் ஆறாம் இடத்திற்கு தள்ளப்பட்ட ஆஸ்திரேலிய அணி..!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி கடந்த சில மாதங்களாக தொடர் தோல்விகளை சந்தித்து வருகின்றது . இந்நிலையில் தற்போது இங்கிலாந்து உடனான ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் 5-0 என்ற கணக்கில் மோசமான தோல்வி சந்தித்தது. இந்நிலையில் ஐ.சி.சி ஒரு நாள் போட்டிக்கான அணிகளின் தரவரிசைப் பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் ஆஸ்திரேலிய அணி 4 புள்ளிகள் குறைந்து 100 புள்ளிகளுடன் ஆறாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. பாகிஸ்தான் 5-வது இடத்திலும், வங்காளதேச அணி 7-வது இடத்திலும் புள்ளிகள் அடிப்படையில் இடம் … Read more

நான் என்ன செஞ்சாலும் உங்ககிட்ட சொல்லனுமா!சீரிய ரோகித் சர்மா

இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா சில நாட்களுக்கு முன்னதாக நடந்த யோ-யோ டெஸ்டில் பங்கேற்காதது குறித்து வெளியான தகவல்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.  தற்போது இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பிடிக்க வேண்டுமென்றால் யோ-யோ டெஸ்டில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணியில் அம்பதி ராயுடு இடம்பிடித்திருந்தார். இவர் யோ-யோ டெஸ்டில் தோல்வியடைந்ததால் இந்திய அணியில் இருந்து வெளியேற்றப்பட்டார். அவருக்குப் பதிலாக சுரேஷ் ரெய்னா இடம்பிடித்தார். அதேபோல் முகமது ஷமி (ஆப்கானிஸ்தான் டெஸ்ட்) மற்றும் … Read more

மொத்தம் 200 போட்டிகளில் இந்திய அணி விளையாடுகிறது! உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் முதல் போட்டியில் இந்தியா மே.இ.தீவுகளுடன் மோதல்!

இந்திய அணி ஐசிசி அறிவித்துள்ள முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளில் தனது முதல் டெஸ்ட் போட்டியில்  மே.இ.தீவுகளை அங்கு சென்று சந்திக்கிறது. ஐசிசி இன்று வெளியிட்டுள்ள 2018-23 கிரிக்கெட் தொடர்களுக்கான எதிர்கால தொடர்கள் திட்டத்தை (எஃப்.டி.பி) வெளியிட்டது. 2 டெஸ்ட்கள் கொண்ட உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் மே.இ.தீவுகளை எதிர்த்து அங்கு ஆடுகிறது இந்திய அணி. மொத்தம் அனைத்து வடிவங்களிலும் சேர்த்து 102 சர்வதேச போட்டிகளில் 2018 முதல் 2023 வரை உள்நாட்டில் ஆடுகிறது. இந்த சவுகரியம் … Read more

இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் தோனியின் மனைவி சாக்‌ஷிக்கு ஆபத்து! துப்பாக்கி உரிமம்கோரி விண்ணப்பம்!

அச்சுறுத்தல் காரணமாக தோனியின் மனைவி சாக்‌ஷி துப்பாக்கி உரிமம்கோரி விண்ணப்பித்துள்ளார். இந்திய அணியின் முன்னால் கேப்டன் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான மகேந்திர சிங் தோனியின் மனைவி பெயர் சாக்ஷி.இவருக்கு சிவா என்ற ஒரு பெண்குழந்தையும் உள்ளது. சமீபத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் தான்  சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மகேந்திர சிங் தோனியின் கோப்பையை வென்றது. இந்நிலையில் தற்போது அச்சுறுத்தல் காரணமாக தோனியின் மனைவி சாக்‌ஷி துப்பாக்கி உரிமம்கோரி விண்ணப்பித்துள்ளார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

எந்தெந்த நாடுகள் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அதிக ரன்கள் எடுத்துள்ளது?இந்தியாவிற்கு எத்தனையாவது இடம் ?

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான நேற்று நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து அணி 481 ரன்களை குவித்துள்ளது. இது தான் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தற்போது வரை குவிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கேராக உள்ளது. இதற்கு அடுத்தப்படியாக இதே இங்கிலாந்து அணி 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 444 ரன்கள் எடுத்தது தான் உள்ளது. 2006-ம் ஆண்டு நெதர்லாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இலங்கை அணி குவித்த 443 ரன்கள் தான் 3வது அதிகட்ச … Read more

உலக சாதனை படைத்த இங்கிலாந்து!50 ஓவர்களில் 481 ரன்கள்!ஜானி பேர்ஸ்டோவ் ,அலெக்ஸ் ஹேல்ஸ் அதிரடி சதம்!

 நேற்று ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 3வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நாட்டிங்காமில்  நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. இதையடுத்து பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 50 ஓவர்கள் முடிவில் அந்த அணி 6 விக்கெட் இழப்பிற்கு 481 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக ஜானி பேர்ஸ்டோவ் 139 ரன்களும், அலெக்ஸ் ஹேல்ஸ் 147 ரன்களும் சேர்த்தனர். 2016 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் 444 … Read more