ராஜேந்திர பாலாஜி , எடப்பாடி பழனிசாமி இருவருக்கும் இடையே முரண்பாடு-ஸ்டாலின் விமர்சனம்!

நெல்லை சமாதானபுரத்தில் உள்ள ஒண்டிவீரன் சிலைக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின் , அதிமுக ஆட்சியில் மூன்றுமுறை பால் விலை உயர்ந்து உள்ளது.பால் உற்பத்தியாளர்கள் மற்றும் மக்கள் இடையே பிளவை ஏற்படுத்த முதல்வர் பழனிசாமி முயற்சி செய்கிறார்.

பால்வள துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பால் வளத்தை பொறுத்தவரை லாபத்தில் இயங்கி வருவதாக கூறுகிறார்.ஆனால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நஷ்டத்தில் இயங்கி வருவதால் பால் விலையை உயர்த்தியதாககூறுகிறார்.

இவர்கள் இருவருக்கும் இடையே முரண்பாடு உள்ளது.எது உண்மை எது பொய் என மக்களிடம் எடுத்து செல்லவேண்டும் என கூறினார்.

 

author avatar
murugan