திமுக செயல் தலைவர் கூறுவது போன்று உடனடியாக ஆட்சியை கலைத்து விட முடியாது!

அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்  தமிழகத்திலிருந்து அதிகளவில் வருவாய் பெற்ற போதும், தமிழகத்திற்கு தேவையான நிதியை, மத்திய அரசு வழங்க மறுப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை வேளச்சேரியில் 2 நாட்கள் நடைபெறும் விவசாய முதலீட்டாளர்கள் கருத்தரங்கை தொடக்கி வைத்து பேசிய அவர், போதுமான நிதியை பெறவே மத்திய அரசுடன் தமிழக அரசு சுமூகமாக இருப்பதாக விளக்கம் அளித்தார்.

திமுக செயல் தலைவர் கூறுவது போன்று உடனடியாக ஆட்சியை கலைத்து விட முடியாது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment