தேனி மாவட்டம் குரங்கணி தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22-ஆக உயர்வு…!

தேனி குரங்கணி தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 22 ஆனது.

தேனி அருகே குரங்கணி காட்டுப்பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டது. இந்த காட்டுத்தீ கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு பரவி வந்தது. இந்த பகுதியில் மலையேறும் பயிற்சியில் ஈடுபட சென்னை, கோவை, ஈரோடு மாணவிகள் வந்திருந்தனர்.

இதில் மொத்தம் 39 பேர் தீயில் சிக்கிக் கொண்டனர். தீவிரமான மீட்பு பணிகளுக்கு பிறகு 30 பேர் உயிருடன் மீட்கப்பட்டார்.இதில்  மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த உடுமலைபேட்டை சிவசங்கரி உயிரிழந்தார் .தீக்காயமடைந்த சிவசங்கரி மார்ச்12 முதல் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment