தமிழகத்தில் இன்று  பள்ளிகளுக்கு அறிவிக்கப்பட்டிருந்த விடுமுறை ரத்து!

தமிழகத்தில் ரம்ஜான் பண்டிகை சனிக்கிழமை கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டதால் தமிழகத்தில் இன்று  பள்ளிகளுக்கு அறிவிக்கப்பட்டிருந்த விடுமுறை ரத்து என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.தமிழகத்தில் ரம்ஜான் பண்டிகை சனிக்கிழமை கொண்டாடப்பட உள்ளதால் சனிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை என்று அறிவித்துள்ளது.

இதேபோல் தமிழகம் எங்கும் நேற்று  பிறை தெரியாததால், நாளை  ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என்று தலைமை ஹாஜி அறிவித்துள்ளார்.

முன்னதாக ரம்ஜானையொட்டி இன்று  தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என தமிழக அரசு அறிவித்தது

பள்ளி கல்வித்துறை வெளியிட்ட அறிக்கையில் இன்று  ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு அணைத்து பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது .மேலும் நாளை அந்தந்த பள்ளிகளின் அறிவுறுத்தலின் படி பள்ளிகள் நடைபெறும்.நாளை பள்ளிகளுக்கு விடுமுறை என்று அறிவித்துள்ளது தமிழக அரசு.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment