சென்னை அருகே மது அருந்திய போது ஏற்பட்ட பிரச்சனையால் நண்பனைக் கொலை செய்த இளைஞர் தற்கொலை!

நண்பனைக் கொலை செய்த இளைஞர் சென்னை ரிச்சி தெருவில், தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ரிச்சி தெரு, முகமது உசேன் சந்துப் பகுதியில் உள்ள மின்னணு பொருட்கள் விற்பனையகத்தில் அதே பகுதியைச் சேர்ந்த சரவணன் மற்றும் பிரபு ஆகியோர் பணிபுரிந்து வந்தனர். நேற்று விடுமுறை என்பதால் கடையின் குடோனில் இருவரும் தங்கினர். இன்று காலை குடோனை திறந்த போது சரவணன் தூக்கிட்ட நிலையிலும், பிரபு கத்தியால் குத்தப்பட்டு ரத்த வெள்ளத்திலும் சடலமாக கிடந்தனர்.

நண்பர்களாக இருந்த இருவரும் 6 மாத காலம் பேசாமல் இருந்துள்ளனர். பின்னர் மீண்டும் நட்புடன் பழகிய நிலையில் நேற்றிரவு மது அருந்திய போது பிரச்சனை ஏற்பட்டு கொலை நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து சிந்தாதிரிப்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment