கோவையில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி  தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு பணிக்கொடை வழங்கினார்!

ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற வால்பாறை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு பணிக்கொடை வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

வால்பாறையில் கடந்த 15 ஆண்டுகளாக பணிக்கொடை கிடைக்காமல் இருந்த 116 தொழிலாளர்களுக்கு 56 லட்சத்து 36 ஆயிரத்து 261 ரூபாய் பணிக்கொடையினை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார். பின்னர் பேசிய அவர், தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு அரசு எப்போதும் உறுதுணையாக இருக்கும் என்றும் விடுபட்ட கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்றும் கூறினார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment