கர்நாடகாவில் குதிரை பேரத்துக்கு வழிவகுத்து, ஜனநாயகத்தை புதைக்க பா.ஜ.க. ஈடுபட்டிருப்பதாக வைகோ குற்றம்சாட்டியுள்ளார்..!

கர்நாடகாவில் குதிரை பேரத்துக்கு வழிவகுத்து, ஜனநாயகத்தை புதைக்கும் செயலில் பா.ஜ.க. ஈடுபட்டிருப்பதாக ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார். ஸ்டெர்லைட் ஆலையை தொடர்ந்து நடத்த அனுமதி கோரி, சென்னை புரசைவாக்கத்தில் உள்ள தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் மேல்முறையீட்டு ஆணையத்தில் வேதாந்தா குழுமம் வழக்கு தொடர்ந்துள்ளது.

இதுகுறித்த விசாரணையில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக ஆஜரான வைகோ, பின்னர் செய்தியாளர்களுடன் பேசினார். அப்போது, காவிரி விவகாரத்தை குறிப்பிட்டு பேசிய அவர், தீர்ப்பாயம் அளித்த இறுதித் தீர்ப்பின் ஜீவன் அழிக்கப் பட்டிருப்பதாக குற்றம்சாட்டினார்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment