கருணாநிதி நல்லடக்கம்…!தொடரும் உயிர் பலி …!ராஜாஜி ஹாலில் ஏற்பட்டநெரிசலில் 3 பேர் பலி ..!50 பேர் காயம்…!

இன்று மெரினாவில் திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு முப்படை வீரர்கள் 21 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தினர்.
பின் மெரினாவில் அரசு மரியாதையுடன் திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. ஆனால் ராஜாஜி ஹாலில் கருணாநிதி உடல் வைக்கப்பட்டிருந்த  இடத்தில் ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக தொண்டர்கள் சிலர் இறந்துள்ளனர்,காயமும் அடைந்துள்ளனர்.

நேற்று 11 ஆவது நாளாக திமுக தலைவர் கருணாநிதிக்கு காவேரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது .பின் தி.மு.க தலைவர் கலைஞர் சென்னை காவேரி மருத்துவமனையில் காலமானார் என்று காவேரி மருத்துவமனை  அறிக்கை வெளியிட்டது.
நேற்று இரவு கோபாலபுரம் வீட்டிற்கு உடல் கொண்டு வரப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.அங்கு பல்வேறு முக்கிய தலைவர்களும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்கள்.
Image result for கருணாநிதி
இதன் பின்னர் இன்று அதிகாலை திமுக தலைவர் கருணாநிதியின் உடல் ராஜாஜி ஹாலில் நினைவு அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
இங்கும் காலை முதலே அனைத்து தரப்பினரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்கள்.

பின்னர் மதியம்  ராஜாஜி அரங்கத்தில் உணர்ச்சி பெருக்கில் கருணாநிதி உடலை பார்க்க முண்டியடிக்கும் தொண்டர்களை கட்டுப்படுத்த போலீஸ் திணறினார்கள்.
இதனால் ராஜாஜி ஹாலில் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் 3 பேர்  பலி என தகவல் வெளியாகியுள்ளது.மேலும்  50 பேர் காயங்களுடன் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதி அழிக்கப்பட்டுள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment