கருணாநிதி நினைவிடத்தில் தேசிய தலைவர்களின் அஞ்சலி…!

கருணாநிதி அவர்களின் நினைவிடத்தில் தேசிய தலைவர்களின் அஞ்சலி செலுத்தினார்கள்.
திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் சிலை திறப்பு விழா நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க  காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி,காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கேரளா, ஆந்திரா மற்றும் புதுச்சேரி முதலமைச்சர் வந்துள்ளனர்.
இந்நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி,காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சென்னை வந்தடைந்த நிலையில் தற்போது சோனிய காந்தி சிலையை திறந்து வைத்தார்.
சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிடத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி,ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.
இதன் பின்னர் மெரினா கடற்கரையில் உள்ள திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி அவர்களின் நினைவிடத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி,ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.

Leave a Comment