அதிமுகவில் எந்த பிரச்னையும் இல்லை.! இபிஎஸ் ஆலோசனை கூட்டத்திற்கு பின் ஜெயக்குமார் பேச்சு.!

உட்கட்சியில் எங்களுக்குள் எந்த பிரச்னையும் இல்லை. ஓபிஎஸ், தினகரன், சசிகலா பற்றி பேசி நாங்கள் நேரத்தை வீணடிக்கவில்லை. – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். 

இன்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று முடிந்துள்ளது. அதன் பிறகு முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.

அவர் பேசுகையில், உட்கட்சியில் எங்களுக்குள் எந்த பிரச்னையும் இல்லை. ஓபிஎஸ், தினகரன், சசிகலா பற்றி பேசி நாங்கள் நேரத்தை வீணடிக்கவில்லை. வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு இபிஎஸ் ஆலோசனைகளை கொடுத்தார். என கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் இருக்கிறது. அது நேரம் வருபோது தெரியும் என கூறினார். அடுத்து, ஆளும் திமுக அரசு பற்றி தங்களது விமர்சனத்தை முன்வைத்தார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.

 

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment