நீட் தேர்வால்  தற்கொலை செய்துகொள்வது தொடர்கதையாக இருந்து வருகிறது – ஸ்டாலின்

நீட் தேர்வால்  தற்கொலை செய்துகொள்வது தொடர்கதையாக இருந்து வருகிறது என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நாங்குநேரி மருதகுளத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார்.அப்பொழுது அவர் பேசுகையில், நீட் தேர்வால் பல மாணவ, மாணவிகள் தற்கொலை செய்துகொள்வது தொடர்கதையாக இருந்து வருகிறது.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் கூட, தமிழகத்தில் நீட் தேர்வை திணிக்க முயற்சித்தார்கள் ஆனால், அவர் அதை எதிர்த்தார் அவரை நாங்கள் பாராட்டுகிறோம்.தமிழகத்தில் சுகாதாரம், ஊரக வேலைவாய்ப்பு மற்றும் முதியோர் உதவித்திட்டம் உட்பட பல அடிப்படை திட்டங்கள் எதுவும் முறையாக நடக்கவில்லை  என்று பிரச்சாரம் மேற்கொண்டார்.