பாஜகவின் தேசிய செய்திதொடர்பாளராக அறிவிக்கப்பட்ட முன்னாள் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர்.!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் செய்தி தொடர்பாளராக இருந்த ஜெய்வீர் ஷெர்கில் பாஜகவின் தேசிய செய்தி தொடர்பாளராக நியமிக்கப்பட்டார்.

காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவராகவும், செய்தி தொடர்பாளராகவும் பொறுப்பில் இருந்தவர் ஜெய்வீர் ஷெர்கில். இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் ராஜினாமா கடிதம் கொடுத்துவிட்டு அக்கட்சியை விட்டு வெளியேறினார்.

காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேற பாஜகவில் அண்மையில் ஜெய்வீர் ஷெர்கில் சேர்ந்தார். தற்போது அவருக்கு பாஜகவில் முக்கிய பொறுப்பாக தேசிய செய்தி தொடர்பாளர் எனும் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

ஜெய்வீர் ஷெர்கில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு எழுதிய கடிதத்தில் , தனிமனிதர்கள் தங்கள் சுயநல நலதிற்காக கட்சி மீது செல்வாக்கு செலுத்துகின்றனர். தொடர்ந்து கள யதார்த்த அரசியலை புரிந்து கொள்ள மறுக்கின்றனர். ‘ என குறிப்பிட்டு இருந்தார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment