டெல்லியில் மாநகராட்சி தேர்தல்.! மெட்ரோ ரயில் நேரம் மாற்றம்..!!

டெல்லியில் வரும் டிச-4 ஆம் தேதி நடைபெறும் மாநகராட்சி தேர்தலை முன்னிட்டு மெட்ரோ ரயில் சேவையானது அதிகாலை 4 மணி முதல் இயங்க இருக்கிறது.

டெல்லியில் 250 வார்டுகளுக்கான மாநகராட்சி தேர்தல் டிச-4 ஆம் தேதி காலை 8 மணியில் இருந்து மாலை 5.30 வரை நடத்தப்படுகிறது. இந்த மாநகராட்சி தேர்தலுக்காக  ஞாயிற்றுக்கிழமை அன்று மெட்ரோ ரயில் சேவையானது, அனைத்து தடங்களில் இருந்தும் அதிகாலை 4 மணிக்கு இயங்க ஆரம்பிக்கிறது.

காலை 4 மணியிலிருந்து 6 மணி வரை  அனைத்து ரயில்களும் 30 நிமிட இடைவெளியிலும், அதன் பின்னர் ஞாயிற்றுக்கிழமை இயக்கப்படும் வழக்கமான கால அட்டவணைப்படி இயஙகும் என டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனம் (டிஎம்ஆர்சி) தெரிவித்துள்ளது.

 

author avatar
செந்தில்குமார்
நான் செந்தில்குமார், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்கிறேன். செய்தி ஊடகத்தின் மீதான ஆர்வத்தினால், ஒரு வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். டெக்னாலஜி, க்ரைம், விளையாட்டு, தமிழ்நாடு முதல் உலக செய்திகள் வரை அனுபவம் உள்ளது.

Leave a Comment