தமிழகத்தில் 27 ஆண்டுகள் ஆளும் கட்சியாக இருப்பது அதிமுகதான் …! துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

தமிழகத்தில் 27 ஆண்டுகள் ஆளும் கட்சியாக இருப்பது அதிமுகதான் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக  பெரியகுளத்தில்  துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்  கூறுகையில், ஒரு குடும்பத்தின் பிடியில் சிக்கி கட்சி பாடுபட்டது அதிமுகவை கைப்பற்ற ஒரு குடும்பம் சதித்திட்டம் தீட்டியதை தொண்டர்கள் முறியடித்தனர்.

அதேபோல்  நியூட்ரினோ திட்டத்துக்கு தற்போதுவரை தமிழக அரசு அனுமதி வழங்கவில்லை. நியூட்ரினோ திட்டத்துக்கு முதலில் அனுமதி கொடுத்தது திமுக ஆகும். மக்களுக்கு எதிரான திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தாது.

மேலும் இடைத்தேர்தலில் 18பேரும் டெபாசிட் இழப்பது உறுதி.பேரறிவாளன் உட்பட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என தொடர்ந்து வலியூறுத்துவோம். 7 பேரும் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதே அரசின் நிலைப்பாடு என்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

Leave a Comment