நெல்லையில் கனமழை.! மதியத்திற்கு மேல் பள்ளிகளுக்கு விடுமுறை.!

Tirunelveli District school leave

திருநெல்வேலியில் தற்போது கனமழை பெய்து வருவதன் காரணமாக  பல்வேறு பள்ளிகளில்  மழைநீர் தேங்கும் சூழல் உருவாகியுள்ளது. இதனை கருத்தில் கொன்டு அம்மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை மேற்கொண்டு தற்போது முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். எச்சரிக்கை: தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட 4 மாவட்டத்தில் வெளுத்து வாங்கும் மிக கனமழை! அதன்படி, நெல்லை மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக பள்ளிகளில் மழைநீர் தேங்கும் சூழல் ஏற்பட்டால் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களே பிற்பகலில் விடுமுறை அறிவித்து … Read more

மழை நிவாரண தொகை பெற இன்று கடைசி நாள் என அறிவிப்பு..!

கடந்த டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் தென்மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் குமாரி ஆகிய மாவட்டத்தில் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தால் கடும் சேதம் அடைந்தன. இதைத்தொடர்ந்து, தூத்துக்குடி, திருநெல்வேலியில் மழை வெள்ளம் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள வட்டங்களில் குடும்ப அட்டை தாரர்களுக்கு தலா ரூ. 6000 , மற்ற பகுதிகளுக்கு ரூ.1,000 நிவாரண தொகையாக முதல்வர் அறிவித்தார். இந்நிலையில், தென்காசி மாவட்ட ஆட்சியர் ரவிச்சந்திரன் வெளிட்ட அறிக்கையில், “நிவாரண நிதியை … Read more

தூத்துகுடியில் நிவாரண பொருட்கள் வழங்கிய டி.ஆர்.! மயங்கி விழுந்ததால் பரபரப்பு.!

TRajender in Tuticorin

தென்மாவட்டங்களில் ஏற்பட்ட கனமழை காரணமாக தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மழைநீர் புகுந்தது. குறிப்பாக தாமிரபரணி ஆறு நிரம்பியதால் நீர்நிலைகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கானது ஊருக்குள் புகுந்தது. இந்த வெள்ள பாதிப்புகளில் இருந்து இன்னும் இருமாவட்ட மக்கள் முழுதாக மீளவில்லை என்றே கூற வேண்டும். தடுக்கி விழுந்த நடிகர் விஜய்! கடுப்பாகி நிர்வாகியை தாக்கிய புஸ்ஸி ஆனந்த்! கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு நிவாரண உதவிகளை வழங்கி வரும் வேளையில், பல்வேறு அரசியல் கட்சியினரும், தன்னார்வளர்களும் … Read more

சேதமடைந்த வீடுகள். பயிர் சேதம்.. வணிகர்களுக்கு கடன்..! ரூ.1000 கோடி நிவாரண தொகுப்பு.!

Tamilnadu CM MK Stalin - SouthTNRains Flood Relief

கடந்த டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் தென்மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் பல்வேறு பகுதிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின. தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வெள்ளநீர் ஊருக்குள் புகுந்ததால், இரு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தால் சூழ்ந்தன. அந்த வெள்ள பாதிப்பில் இருந்து தற்போது வரை மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த 21ஆம் தேதியன்று முதல்வர் மு.க.ஸ்டாலின், இரு மாவட்டத்திற்கும் நேரில் சென்று பார்வையிட்டார். அதன் பின்னர் பல்வேறு … Read more

நான் ஏன் தூத்துக்குடிக்கு சென்றேன்.? விமர்சனங்களுக்கு தமிழிசை பதில்.!

Tamilisai soundarajan says about Thoothudi Floods

தென்மாவட்ட கனமழையால் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்ட்டன . தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்திக்க, பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சில தினங்களுக்கு முன்னர் தூத்துக்குடி வந்திருந்தார். தூத்துக்குடியில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டபின்னர் பேசுகையில், இந்த ஆட்சியை சேர்ந்தவர்கள் மாற்றாந்தாய் மனப்பான்மையோடு மத்திய அரசு செயல்பட்டு வருகிறது என்று சொல்கிறார்கள். நான் இப்போது நேரடியாக குற்றம்சாட்டுகிறேன் தென்மாவட்டங்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் தமிழக … Read more

தூத்துக்குடியில் நிர்மலா சீதாராமன்… வெள்ள பாதிப்பு குறித்து முக்கிய ஆலோசனை.!

Central Minister Nirmala Sitharaman visit Thoothukudi

தென் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்கள் பல பகுதிகள் வெள்ளத்தால் பலத்த சேதமடைந்தன. குறிப்பாக தாமிரபரணி ஆற்றின் நீர்வழி பகுதிகளில் நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பி, பெரும்பாலான குளங்களில் உடைப்பு ஏற்பட்டு அப்பகுதி முழுவதும் வெள்ளம் சூழ்ந்தது. கடந்த பத்து நாட்களாகியும் இன்னும் பல்வேறு இடங்களில் இந்த வெள்ள நீர் தேங்கி நிற்கிறது. இதனை அகற்றும் பணியில் அரசு ஊழியர்கள், தன்னார்வலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு அரசியலமைப்பினர் தன்னார்வலர்கள் … Read more

தாமிரபரணி ஆற்றின் நீர்வழிபாதையில் புதிய திட்டங்கள்… அமைச்சர் எ.வ.வேலு அறிவிப்பு.!

Thamirabarani RIver - Minister AV Velu

தென்மாவட்டத்தில் பெய்த் அதீத கனமழை காரணமாக தூத்துக்குடி , திருநெல்வேலி மாவட்ட மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகினர். தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், அதன் வழித்தடத்தில் இருந்த பல்வேறு நீர்நிலைகள் நிரம்பி, பல்வேறு இடங்களில் உடைப்பு ஏற்பட்டு அருகில் உள்ள பகுதிகளை வெள்ளநீர் சூழ்ந்தது. தற்போது ஒருசில முக்கிய பகுதிகளை தவிர மற்ற இடங்களில் ஓரளவுக்கு இயல்புநிலை திரும்பினாலும், இன்னும் மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பாமல் தவித்து வருகின்றனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியில் … Read more

முதற்கட்ட நிவாரண பணிகள்.. அரசியல் செய்ய வேண்டாம்.! அமைச்சர் உதயநிதி வேண்டுகோள்.!  

Minister Udhayanidhi stalin - Tirunelveli flood relief

தென் மாவட்டத்தில் பெய்த அதீத கனமழை காரணமாக தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்ட மக்கள் வெள்ளத்தால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பெரு வெள்ளத்தால், உயிர்சேதம், பொருட்சேதம், கால்நடை உயிர்சேதம் என பெருமளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இன்னும் பல்வேறு இடங்களில் தேங்கிய தண்ணீரை வெளியேற்றும் முயற்சியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இரு மாவட்ட வெள்ள பாதிப்பு பகுதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு பின்னர் வெள்ள நிவாரண உதவி தொகை விவரங்களை அறிவித்தார். ரேஷன் கார்டுதரர்களுக்கு தலா 6000 ரூபாய், … Read more

தூத்துக்குடியில் 22.. நெல்லையில் 13 உயிரிழப்புகள்.. கணக்கெடுப்பு தொடர்கிறது.! – தலைமை செயலாளர்

Shivdas Meena - SouthTNRains

கடந்த டிசம்பர் 17, 18 ஆகிய தேதிகளில் தென்மாவட்டத்தில் பெய்த கனமழையால் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்ட மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டனர். குறிப்பாக தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், அதன் வழித்தடத்தில் உள்ள நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பி இரு மாவட்டத்திலும் பல்வேறு ஊர்களில் வெள்ளநீர் புகுந்தது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணிகள் கடந்த 6 நாட்களாக தொடர்ந்து வருகிறது. இன்னும் பல்வேறு இடங்களில் மீட்பு பணிகள் தொடர்ந்து வருகின்றன. மக்கள் பிரதிநிதிகள் பலர் களத்தில் நின்று மீட்பு … Read more

கனமழை வெள்ளத்தால் சான்றிதழ் சேதமா.? மாணவர்கள் இலவசமாக பெறலாம்.! 

SouthTNRains - Educational Certificates

தென்மாவட்டங்களில் பெய்த கனமழையால் தூத்துக்குடி, திருநெல்வேலியில் பல்வேறு பகுதிகள் குறிப்பாக  தாமிரபரணி ஆறு ஓடும் பகுதிகள் அனைத்தும் வெள்ளத்தால் பெருமளவு பாதித்துள்ளன. வெள்ளத்தால் தென்மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கான வீடுகளில் தண்ணீர் புகுந்தது.  இதனால் பல்வேறு மாணவர்களின் முக்கிய சான்றிதழ்கள் நீரில் மூழ்கின. தமிழகத்தில் 28-ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் தகவல்! இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் வெகுவாக பாதிக்கப்ட்டனர். ஏனென்றால், அந்த ஒரிஜினல் கல்வி சான்றிதழ்களின் நகலை பெறுவதற்கு சாதாரண நாட்களில் மிகுந்த சிரமமாக … Read more