சென்னை : கோவில் நிதியை கொண்டு கல்லூரிகள் அமைப்பது எந்த விதத்தில் நியாயம்? என எடப்பாடி பழனிசாமி பேசியதற்கு அமைச்சர் சேகர்பாபு விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக, இன்று காலை செய்தியாளர்களை சந்தித்து பேசிய இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, “ஆட்சியை குறை சொல்ல வேண்டும் என்ற காரணத்திற்காக எதிர்க்கட்சித் தலைவர் அறநிலையத்துறையை விமர்சித்துள்ளார். இந்து சமய அறநிலையத்துறை கல்லூரிகளில் வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளவர்கள்தான் பயில்கின்றனர். திமுக ஆட்சியில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 4 […]
சென்னை : கோவையில் தனது பிரச்சாரத்தின் போது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, ”கோவில் நிதியில் இருந்து கல்லூரி கட்டுகிறார்களாம். கோவிலின் முன்னேற்றத்திற்காக பொதுமக்களாகிய நீங்கள் நிதி கொடுத்தால், அதை வைத்து, இவர்கள் சம்பாதிப்பதற்காக கல்லூரிகள் அமைக்கிறார்களாம். ஏன் அரசாங்க நிதியை வைத்து கட்ட முடியாதா? என்று கேள்வி எழுப்பியிருந்தார். எடப்பாடி பழனிசாமிக்கு பதிலளிக்கும் வகையில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் சேகர்பாபு, “இந்து சமய அறநிலையத்துறை சட்டத்தின்படி கோயில்கள் நிதியில் கல்வி […]
சென்னை : நேற்றைய தினம் மதுரையின் வண்டியூர் பகுதியில் உள்ள அம்மா திடலில் ஒரு பிரமாண்டமான முருகன் மாநாடு நடைபெற்றது. முருகன் மாநாட்டில் பாஜக மூத்த தலைவர்கள், நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். மேலும் இதில், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜு, கடம்பூர் ராஜு, கே.டி.ராஜேந்திர பாலாஜி மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா ஆகியோர் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் பலவிதமான நிகழ்ச்சிகள், உரைகள், கலை நிகழ்வுகள் இதில் இடம்பெற்றன. இந்த மாநாடு ஆன்மீக நிகழ்வாக […]
சென்னை : மதுரையில் நேற்றைய தினம் முருக பக்தர்கள் மாநாடு, இந்து முன்னணி மற்றும் பாஜகவின் ஒருங்கிணைப்பில் மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில், லட்சக்கணக்கான முருக பக்தர்கள், 15 நாட்கள் விரதம் இருந்து மாநாட்டில் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் பங்கேற்றார். மேலும், பாஜக மூத்த தலைவர்கள், நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். இந்த மாநாடு ஆன்மீக மற்றும் கலாச்சார நிகழ்வாக அறிவிக்கப்பட்டாலும், இதற்கு அரசியல் பின்னணி இருப்பதாக திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளால் விமர்சிக்கப்பட்டது. இந்த நிலையில், […]
சென்னை : நேற்று விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் மாவட்ட தலைவர்கள் மற்றும் செயலாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அன்புமணி கூட்டத்தில் பங்கேற்காத நிலையில், பல மாவட்ட தலைவர்கள், செயலாளர்கள் பங்கேற்கவில்லை என்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகவும் மாறியது. கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய கட்சி நிறுவனர் ராமதாஸ் ” கட்சி வளர்ச்சிக்கான ஆலோசனைக் கூட்டம் இன்று நடக்கிறது. கூட்டத்திற்கு சிலர் வரவில்லை என்பதை பார்த்திருப்பீர்கள். மாநாட்டுக் களைப்பில் இருப்பதால் […]
மதுரை : உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான, அழகர் வைகையாற்றில் இறங்கும் வைபவம், இன்று சிறப்பாக நடைபெற்றது. மதுரை வைகை ஆற்றில் தங்கக் குதிரை வாகனத்தில் பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் எழுந்தருளினார். லட்சக்கணக்கான பக்தர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து அழகரை குளிர்வித்து, விண்ணை முட்டும் ‘கோவிந்தா கோவிந்தா’ முழக்கத்துடன் வழிபாடு செய்தனர். இந்த கூட்டத்தில் கள்ளழகர் எழுந்தருளும் மண்டகப்படி பகுதியில் பக்தர் ஒருவர் மயங்கி விழந்து உயிரிழந்தார். நெல்லையை சேர்ந்த அவர் (பூமிநாதன்) […]
சென்னை : நீலகிரி மாவட்டம் உதகையில் திமுக மாணவர் அணி செயலாளர்கள் மற்றும் துணைச் செயலாளர்களின் ஆலோசனை கூட்டம் தனியார் அரங்கில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட திமுக துணை பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா, “சாமி கும்பிடுங்க வேணானு சொல்ல வில்லை. ஆனால், திமுக வேட்டிய கட்டும் போது பொட்டு வைக்க வேண்டாம், நீங்களும் நெற்றியில் பொட்டு வைத்து, கையில் கயிறு கட்டுகிறீர்கள். சங்கிகளும் இதைதான் செய்கிறார்கள் யார் சங்கி, யார் திமுகவினர் என […]
சென்னை : திருச்சி மாவட்டத்தில் நேற்று பாஜக சார்பில் தேசிய கல்வி கொள்கைக்கு ஆதரவாக பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, எச்.ராஜா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டார்கள். அப்போது விழாவில் பேசிய எச்.ராஜா அமைச்சர் சேகர்பாபுவை கடுமையாக விமர்சனம் செய்து பேசியிருந்தார். இது குறித்து பேசிய அவர் ” அமைச்சர் சேகர்பாபு என்னை பொறுத்தவரை பீடை. அவரை சிறைக்கு அனுப்பும் வரை நான் ஓய்வே மாட்டேன்” என பேசியிருந்தார். அதைப்போல, அடுத்ததாக பேச […]
சென்னை : டாஸ்மாக் டெண்டர் விவகாரத்தில் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் வரையில் முறைகேடு நடைபெற்று இருக்கலாம் எனக் அமலாக்கத்துறை கூறிய நிலையில் இந்த விவகாரம்ஹாட் டாப்பிக்காக வெடித்துள்ளது. இந்த விவகாரம் குறித்து த.வெ.க தலைவர் விஜய் திமுக குறித்து விமர்சனம் செய்து பெரிய அறிக்கை ஒன்றை வெளியீட்டு இருந்தார். அதைப்போல, தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் முற்றுகை போராட்டம் நடத்தி திமுகவுக்கு கண்டனங்களை தெரிவித்தார். போராட்டம் நடத்தியபோது கைது செய்யபட்ட அண்ணாமலை “ரூ. 1,000 கோடிக்கு […]
சென்னை : பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து பேசிய விஷயம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. சமீபத்தில் பேசியிருந்த அவர் “சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அதிகாரமில்லை என முதலமைச்சர் சொல்வது கோழைத்தனம் தான். ஆட்சி அதிகாரத்தில் இருந்து கொண்டு திமுக அரசு தான் கோழைத்தனமாக செயல்படுகிறது” என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்திருந்தார். இதனையடுத்து, திமுகவை சேர்ந்த அமைச்சர்கள் அன்புமணி ராமதாஸ் பேச்சுக்கு கண்டனங்களை தெரிவிக்க தொடங்கிவிட்டார்கள். அந்த வகையில் சென்னையில் […]
சென்னை : தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சமீபத்தில் நடைபெற்ற சர்வதேச கோயில்கள் மாநாட்டில் கலந்து கொண்டபோது பாஜக தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தால் இந்து சமய அறநிலைத்துறை முற்றிலுமாக ரத்து செய்யப்படும் என பேசியிருந்தார். அது மட்டுமின்றி, கோயில்களுக்கு வரும் வருமானங்களை வைத்து, அந்த பகுதியில் கல்வி நிறுவனங்கள் நிறுவலாம் எனவும் பேசியிருந்தார். இந்த சூழலில், இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர் பாபு அண்ணாமலை பேச்சுக்கு பதிலடி கொடுத்ததுடன் அவருக்கு சவால் விடும் வகையிலும் […]
சென்னை : மக்களவைத் தேர்தலின் போது திமுக கூட்டணியில் இணைந்த மக்கள் நீதி மய்யத்திற்கு (மநீம), ஒரு மாநிலங்களவை உறுப்பினர் இடம் வழங்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, வருகிற ஜூலை மாதம் நடைபெறும் ராஜ்யசபா தேர்தலின் போது கமல்ஹாசனுக்கு எம்பி பதவி கொடுக்க திமுக திட்டமிட்டு இருப்பதாகவும் சமீபத்தில் அரசியல் வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகி இருந்தது. அதனை கிட்டத்தட்ட உறுதிப்படுத்தும் விதமாக சமீபத்தில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மநீம அலுவலகத்தில், திமுக அமைச்சர் பி.கே. சேகர் […]
திருவண்ணாமலை : வரலாறு காணாத மழையால் திருவண்ணாமலையில் அடுத்தடுத்த இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு வருவதால், பரபரப்பான சூழல் நிலவியது. குறிப்பாக, வஉசி நகரில் ராஜ்குமார் – மீனா தம்பதி வீட்டின் மீது பாறைகள் உருண்டு வந்து தாக்க, உள்ளே சிக்கிக் கொண்ட 5 குழந்தைகள் உள்பட 7 பேரும் மண்ணில் புதைந்தனர். நேற்று 5 பேரது சடலங்கள் மீட்கப்பட்ட நிலையில், எஞ்சிய 2 பேரின் சடலங்கள் 2 நாள்கள் கடும் போராட்டத்திற்கு பின், இன்று மீட்கப்பட்டுள்ளன. மண்ணுக்குள் சிக்கி […]
சென்னை : அதானி குழுமம் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் ஊழல் குற்றசாட்டு முன்வைக்கப்பட்டு வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், அதானியை தமிழக அரசியல் தலைவர்கள் சந்தித்ததாகவும், இது ரகசிய சந்திப்பா அல்லது அதிகாரபூர்வ சந்திப்பா என்பது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டு இருந்தார். இதுகுறித்த கேள்விக்கு பதில் கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “அவருக்கு வேறு வேலை இல்லை, தினமும் ஏதேனும் அறிக்கை வெளியிட்டு கொண்டிருப்பார். […]
சென்னை : திருச்செந்தூர் முருகன் கோயில் யானை தெய்வானை , கடந்த நவம்பர் 18ஆம் தேதியன்று, பாகன் உதயகுமார் மற்றும் பாகனின் உறவினர் சிசுபாலன் ஆகிய இருவரையும் தாக்கியது. இதில் இருவரும் படுகாயமுற்று உயிரிழந்தனர். சாதுவாக கோயிலை சுற்றிவரும் யானை திடீரென ஆக்ரோஷமாக மாறி இருவரை தாக்கிய சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. இதில் யானை பாகனின் உறவினர் சிசுபாலன் தான் யானையிடம் செல்பி எடுக்க முயன்றார். அதனால் தான் யானை அவரை தாக்கியது. எனவும் அப்போது […]
சென்னை : இன்று தமிழக அரசின் அறநிலையத்துறை சார்பில் தமிழ்நாடு முழுக்க பல்வேறு கோயில்களில் 304 இணைகளுக்கு (ஜோடிகளுக்கு) திருமணம் நடைபெற்றது. சென்னை திருவான்மியூர் மருந்தீசுவரர் கோயிலில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 31 இணைகளுக்கு திருமணம் நடைபெற்றது. இந்த விழாவில், அறநிலையத்துதுறை அமைச்சர் சேகர்பாபு, அமைச்சர் பொன்முடி ஆகியோர் கலந்து கொண்டனர். திருமணமாகிய இணைகளுக்கு தாலிக்கு 4 கிராம் தங்கம் , ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள சீர்வரிசை பொருட்கள் ஆகியவை வழங்கப்பட்டன. இந்த விழாவில் […]
சென்னை : நடிகை நமீதாவிடம் இந்து மத சான்றிதழ் கேட்ட விவகாரம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு இன்று செய்தியாளர்களிடம் கூறினார். தமிழகத்தில் உலகப்புகழ் பெற்ற ஆன்மீக சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக விளங்கும் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு, நடிகை நமீதா மற்றும் அவரது கணவர் ஒன்றாக சாமி தரிசனம் செய்ய நேற்று சென்றிருந்தனர். அப்போது அங்குள்ள அதிகாரி ஒருவர் நமீதா மற்றும் அவரது கணவரிடம், அவர்கள் இந்து மதத்தை […]
திண்டுக்கல் : அறநிலையத்துறை சார்பில் இன்றும் (ஆகஸ்ட் 24) நாளையும் (ஆகஸ்ட் 25) பழனியில் நடைபெறும் முத்தமிழ் முருகன் மாநாடு கொடியேற்றத்துடன் தொடங்கியது. தமிழ்க் கடவுள் என போற்றப்படும் முருகன் புகழை போற்றும் விதமாக “முத்தமிழ் முருகன் மாநாடு” எனும் நிகழ்வு தமிழக அரசின் அறநிலையத்துறை சார்பில் இன்றும், நாளையும் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பழனியாண்டவர் கல்லூரி வளாகத்தில் தொடங்கி உள்ளது. இந்த மாநாட்டின் தொடக்க நிகழ்வை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் உள்ள தனது முகாம் அலுவலகத்தில் […]
சென்னை : வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இன்று சென்னையில் 7 அமைச்சர்கள், 3 எம்பிக்கள், எம்எல்ஏக்கள், மாநகராட்சி அதிகாரிகள் ஆகியோர் ஆலோசனை மேற்கொண்டனர். தமிழகத்திற்கு அதிக மழைப்பொழிவை தரக்கூடிய வடகிழக்கு பருவமழையானது ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் ஆரம்பித்து ஜனவரியில் நிறைவுபெறும். குறிப்பாக கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் வங்கக்கடல் பகுதியில் உருவான மிக்ஜாம் புயல் பாதிப்பை பலரும் மறந்திருக்க மாட்டார்கள். மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் சென்னை (முழுவதும்), காஞ்சிபுரம், செங்கல்பட்டு, […]
சென்னை: வடசென்னை பகுதிக்கு மட்டும் 4,181 கோடி ரூபாய்க்கு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளதாக அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். தமிழக அரசு வடசென்னை பகுதியில் மேற்கொள்ளப்பட உள்ள திட்டப்பணிகள் குறித்தும் அதற்கு அரசு ஒதுக்கிய நிதி குறித்தும் பல்வேறு தகவல்களை அமைச்சர் சேகர் பாபு இன்று செய்தியாளர்கள் மத்தியில் கூறினார். அவர் கூறுகையில், வடசென்னை பகுதியில் உள்ள அடிப்படை தேவைகளை நிறைவேற்ற அனைத்து துறைகளையும் அரசு ஒன்றிணைத்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது . வடசென்னை பகுதி மேம்பாட்டு […]