எடப்பாடி அரசை "ஆட்டவோ ,அசைக்கவோ"அமைச்சர் ராஜேந்திரபாலாஜி

எடப்பாடி அரசை எந்த கொம்பனாலும் ஆட்டவோ அசைக்க முடியாது என்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசினார். ஸ்ரீவில்லிபுத்தூர் பஸ் நிலையத்தில் 5 புதிய பஸ்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது.ராதாகிருஷ்ணன் எம்.பி. தலைமை தாங்கினார். ஸ்ரீவில்லிபுத்தூர் எம்.எல்.ஏ. சந்திரபிரபா முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி புதிய பஸ்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-விருதுநகர் மாவட்ட மக்கள் பயன்பெற தேவையான அனைத்து திட்டங்களையும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான … Read more

அருப்புக்கோட்டை குறவர் சமூக குடும்பத்தை இழிவு படுத்திய காவல்துறையை கண்டித்து ஆர்பாட்டம்…

  அருப்புக்கோட்டை நகர் கட்டகஞ்சம்பட்டி பகுதியை சார்ந்த மாரிச்சாமி,போதும்பொண்ணு தம்பதியர்களின் (குறவர் சமூக) குடும்பத்தை அருப்புக்கோட்டை காவல்துறை எந்த முகாந்திரமும் இன்றி இழிவு படுத்தியுள்ளது.வீடு புகுந்து அராஜகம் செய்துள்ளது.ஒரு வாரமாக இரவு 11 மணி வரை காவல்நிலைய வாசலில் நிற்க வைத்துள்ளது.மீன் வாங்கி விற்கும் சுயமரியாதை உள்ள அந்த குடும்பத்திற்கு நீதி கேட்டும்,காவல் ஆய்வாளர் திரு அன்னராஜா மீது நடவடிக்கை கோரியும் அருப்புக்கோட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தீண்டாமை   ஒழிப்பு முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. … Read more

திருவில்லிபுத்தூரில் ஆட்டோ டிரைவர் மீது நகைக்கடை அதிபர் கொலை முயற்சி…

  விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ வில்லிபுத்தூரில் உள்ள வடக்கு ரதவீதியில் செயல்படுகிற ஆட்டோ நிறுத்த தலைவர் சீனிவாசன்  என்பவர் சில சமூக விரோதிகளின் கொலை முயற்சியில் இருந்து தப்பியுள்ளார். மேலும் இவர் புதிய தமிழகம் கட்சியை சார்ந்தவர் சீனிவாசன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் அர்ஜுனன்  மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலச்செயலாளர் சாமுவேல் ராஜ் உள்ளிட்ட தலைவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஸ்ரீனிவாசனை சந்தித்தார்கள். ஆட்டோ நிறுத்தம் இங்கே செயல்படக்கூடாது என நகைக்கடை … Read more