அருப்புக்கோட்டை குறவர் சமூக குடும்பத்தை இழிவு படுத்திய காவல்துறையை கண்டித்து ஆர்பாட்டம்…

 

அருப்புக்கோட்டை நகர் கட்டகஞ்சம்பட்டி பகுதியை சார்ந்த மாரிச்சாமி,போதும்பொண்ணு தம்பதியர்களின் (குறவர் சமூக) குடும்பத்தை அருப்புக்கோட்டை காவல்துறை எந்த முகாந்திரமும் இன்றி இழிவு படுத்தியுள்ளது.வீடு புகுந்து அராஜகம் செய்துள்ளது.ஒரு வாரமாக இரவு 11 மணி வரை காவல்நிலைய வாசலில் நிற்க வைத்துள்ளது.மீன் வாங்கி விற்கும் சுயமரியாதை உள்ள அந்த குடும்பத்திற்கு நீதி கேட்டும்,காவல் ஆய்வாளர் திரு அன்னராஜா மீது நடவடிக்கை கோரியும் அருப்புக்கோட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தீண்டாமை   ஒழிப்பு முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்பாட்டத்தில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலச்செயலாளர் சாமுவேல் ராஜ் உள்ளிட்டு பலர் கலந்துகொண்டனர்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment