உத்தரபிரதேசத்தில் கொரோனா வைரஸ் சோதனை கட்டணம் ரூ .1,600 ஆக நிர்ணயம்.!

உத்தரபிரதேசத்தில் கொரோனா வைரஸ் சோதனை கட்டணத்தை தற்போது ரூ .1,600 ஆக குறைக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் சோதனைக்கு பயன்படுத்தப்படும் ஆர்.டி.பி.சி.ஆர் சோதனை கருவிகள் மற்றும் அதன் உதிரிபாகங்களின் விலை குறைந்து வருவதால், உத்தரபிரதேசத்தில் அனைத்து தனியார்  ஆய்வகங்களில் கொரோனா சோதனை கட்டணத்தை ரூ .2,500-லிருந்து ரூ .1,600 ஆக குறைத்துள்ளது. கொரோனா சோதனைகளுக்குப் பயன்படுத்தப்படும் ஆர்.டி.பி.சி.ஆர் சோதனைக் கருவிகளின் விலைகள் குறைந்துவிட்டன. எனவே, சோதனையின் விலை குறித்த ஏப்ரல் உத்தரவு திருத்தப்பட்டுள்ளது. அதன் படி, தற்போது சோதனையின் … Read more

உத்தரபிரதேச மாநிலத்தில் பாம்பு கடித்து ஒரே நாளில் 6 பேர் உயிரிழப்பு.!

உத்தரபிரதேசத்தின் பல பகுதியில் பாம்பு கடித்து ஒரே நாளில் 6 பேர் உயிரிழப்பு.! உத்தரபிரதேசத்தின் பல மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் பாம்பு கடித்து 6 பலியாகியுள்ளார்கள். அந்த வகையில், உத்தரபிரதேசத்தின் பண்டாவின் கிர்வான் நகரில், 27 வயது இளைஞரும் அவரது மனைவியும் பாம்புக் கடியால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இன்று உயிரிழந்ததாக மாவட்ட மருத்துவமனையின் மருத்துவ அதிகாரி டாக்டர் வினீத் சச்சன் தெரிவித்தார். மேலும், சம்கரா கிராமத்தில் ஒரு விவசாயியும், சிங்பூர் கிராமத்தில் ஒரு பெண்ணும் … Read more

உத்தரபிரதேசத்தில் வார இறுதி ஊரடங்கு இனி ஞாயிற்றுக்கிழமை அமல்படுத்தப்படும்.!

உத்தரபிரதேச மாநிலத்தில் இனி வார இறுதி ஊரடங்கு ஞாயிற்றுக்கிழமைகளில் அமல்படுத்தப்படும். உத்தரபிரதேச மாநிலத்தில் வார இறுதி ஊரடங்கு சனிக்கிழமைகளில் இருந்த நிலையில், தற்போது ஞாயிற்றுக்கிழமைகளில் தொடர முடிவு செய்துள்ளது. மத்திய அமைச்சகம் அன்லாக் 4.0 க்கான புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்ட பின்னர் இந்த புதிய நெறிமுறை அமல்படுத்தப்படுகிறது. உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வார இறுதி ஊரடங்கை சனிக்கிழமை பின்பற்றபடும் என அறிவித்திருந்த நிலையில்,  தற்போது 4 -ஆம் கட்ட வழிகாட்டுதல்களை வெளியிட்ட பின்னர்,  சனிக்கிழமைகளில் ஊரடங்கை நீக்கி … Read more

ஒரே மாதத்தில் இளைஞரை 8 முறை கடித்த ஒரே பாம்பு வினோதமான சம்பவம்.!

உத்தரபிரதேச மாநிலத்தில்  ஒரே பாம்பு ஒரே இளைஞரை 8 முறை கடித்த வினோதமான சம்பவம் நடைபெற்றுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தின் பஸ்தி மாவட்டத்தின் ராம்பூர் கிராமத்தில் ஒரு இளைஞரை கடந்த ஒரு மாதத்தில் ஒரே பாம்பால் எட்டு முறை கடித்ததாகக்கூறப்படுகிறது. இதில், அதிசயம் என்னெவன்றால் 8 முறையும்  பாம்பு கடித்ததில் அவர் உயிர் தப்பித்துவிட்டார். ராம்பூர் கிராமத்தைச் சேர்ந்த யஷ்ராஜ் மிஸ்ரா என்ற இளைஞனை ஒவ்வொரு முறை பாம்பு கடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். கடைசியாக ஆகஸ்ட்-25 ம் தேதி அந்த … Read more

மன அழுத்தத்தால் தாய், சகோதரனை சுட்டு கொன்ற 14 வயது சிறுமி.!

மன அழுத்தம் காரணமாக தனது தாய் மற்றும் சகோதரனை துப்பாக்கியால் 14 வயது சிறுமி சுட்டு கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேசத்தில் உள்ள லக்னோவில் ரயில்வே துறையில் பணிபுரியும் உயர் அதிகாரிகளின் மகளான 14 வயது சிறுமி தேசிய அளவிலான துப்பாக்கி சூடு போட்டியில் கலந்து கொண்டவர். லாக்டவுன் காரணமாக மனஅழுத்தத்தில் இருந்த சிறுமி தனது மணிக்கட்டை வெட்டியுள்ளார். அதனையடுத்து குளியலறையில் உள்ள கண்ணாடியில்  ‘தான் ஒரு தகுதியற்ற மனிதப்பிறவி’ என்ற வாசகத்தையும் ஜாம்மால் … Read more

முன்னாள் கிரிக்கெட் வீரர் சேத்தன் சவுகானின் பெயரை சாலைக்கு வைத்த உத்தரபிரதேச அரசு.!

சேத்தன் சவுகானை நினைவுகூறும் விதமாக அவர் பெயரை ஒரு சாலைக்கு வைக்கவுள்ளதாக உத்தரபிரதேச மாநிலத்தின் துணை முதல்வர் அறிவித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலத்தில் முன்னாள் அமைச்சர் மற்றும் கிரிக்கெட் வீரருமான சேத்தன் சவுகான் சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, குருகிராமில் உள்ள மேடந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் சிகிச்சை பலனின்றி கடந்த ஆகஸ்ட் 16ஆம் தேதி உயிரிழந்தார். சேத்தன் சவுகான், சிவில் பாதுகாப்பு மற்றும் பிராந்தியா ரக்ஷக் தால் போன்றவற்றின் உத்தரபிரதேச அமைச்சராக இருந்தார். இவர் 1970-களில் கிரிக்கெட் … Read more

18 வயது சிறுமியை கற்பழித்து விட்டு கொலை செய்த வழக்கு.! இளைஞர் கைது.!

18 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து விட்டு கத்தியால் அறுத்து கொன்ற வழக்கில் தில்ஷாத் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார். உத்திரப் பிரதேசத்தின் லக்கிம்பூர் கெரி மாவட்டத்தில் 18 வயது சிறுமியின் சடலத்தை போலீசார் கண்டெடுத்தனர். அதனையடுத்து நடந்த பிரேத பரிசோதனையில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது. அதனையடுத்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றது யார் என்ற விசாரணையை போலீசார் நடத்தி வந்தனர். அப்போது, சிறுமி கடந்த சில மாதங்களாக அவரது … Read more

முதலாளியின் கழுத்தை அறுத்து கொலை செய்த இளைஞர் கைது..!

உத்தரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த தஸ்லீம், என்ற இளைஞர் டெல்லியில் பால் விவசாயியாக இருக்கும் ஓம் பிரகாஷ் என்பவரின் வீட்டில் உதவியாளராக பணியாற்றி வந்துள்ளார் .அவருக்கு மாத சம்பளம் 15,000 வழங்கப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்ட காரணத்தால் வருவாய் இல்லாத காரணத்தால் சம்பளத்தை குறைப்பதாக ஓம்பிரகாஷ் கூறியுள்ளார் .இதனால் ஓம் பிரகாஷிற்கும் தஸ்லீம் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது மேலும் ஓம் பிரகாஷ் வீட்டிற்குள் தூங்கும் போது தஸ்லீம் கட்டையை எடுத்து தலையில் பலமாக தாக்கி கழுத்தை … Read more

உத்தரபிரதேசத்தில் இரண்டு சிறுவர்கள் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்பு

உத்தரபிரதேசத்தில் இரண்டு சிறுவர்கள் மரத்தில் தூக்கில் தொங்கி உயிரிழந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். உத்தரபிரதேசத்தின் எட்டாவா மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் இரண்டு சிறுவர்கள் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று மீட்கப்பட்டுள்ளனர்.மீட்கப்பட்ட சிறுவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை ‘சமோசா’ வாங்க வெளியே சென்று வீடு திரும்பவில்லை என்று காவல் துறை தெரிவித்தனர். இறந்தவர்களில் மஹுவா பாட்டியாட் கிராமத்தைச் சேர்ந்த ஆகாஷ்  மற்றும் அங்குல் என தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து சரியான … Read more

பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி திருமணம் செய்து 3முறை தலாக் கொடுக்கப்பட்ட 10வயது சிறுமி.!

10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிய பின்னர் திருமணம் செய்து விட்டு தற்போது 3 முறை தலாக் கொடுத்து விட்டு பெற்றோரிடம் விட்டு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேசத்தில் புதனா காவல் நிலையத்தின் அருகிலுள்ள கிராமத்தில் குழந்தை பராமரிப்பு ஹெல்ப்லைனை சேர்ந்த குழு ஒன்று 10 வயது சிறுமியை ஆலோசனைக்காக பார்வையிட்ட போது திடுக்கிடும் தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்தது. 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அதனையடுத்து அவரது சகோதரியின் மைத்துனரை பிப்ரவரி … Read more