பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி திருமணம் செய்து 3முறை தலாக் கொடுக்கப்பட்ட 10வயது சிறுமி.!

10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிய பின்னர் திருமணம் செய்து விட்டு தற்போது 3 முறை தலாக் கொடுத்து விட்டு பெற்றோரிடம் விட்டு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசத்தில் புதனா காவல் நிலையத்தின் அருகிலுள்ள கிராமத்தில் குழந்தை பராமரிப்பு ஹெல்ப்லைனை சேர்ந்த குழு ஒன்று 10 வயது சிறுமியை ஆலோசனைக்காக பார்வையிட்ட போது திடுக்கிடும் தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்தது.

10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அதனையடுத்து அவரது சகோதரியின் மைத்துனரை பிப்ரவரி 16-ம் தேதி சிறுமிக்கு திருமணம் செய்து வைத்ததாகவும், ஆகஸ்ட் 4-ம் தேதி மூன்று தலாக் கூறி சிறுமியை அவரது பெற்றோர் வீட்டில் விட்டு சென்றதாகவும் பாதிக்கப்பட்ட அந்த சிறுமியே ஹெல்ப்லைன் குழுவில் தெரிவித்துள்ளார்.