குடியரசு தலைவர் சென்னை வருகை! பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!
திருப்பதி சுவாமி தரிசனத்திற்காக குடியரசு தலைவர் ராம்நாத்கோவிந்த் சென்னை வருகை தந்துள்ளதால், விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், காலை 9:45 மணிக்கு ராணுவ ஹெலிகாப்டரில் திருப்பதி கோவிலில் தரிசனம் செய்வதற்காக சென்னை வந்துள்ளார். இந்நிலையில், அங்கு சுவாமி தரிசனம் முடிந்தவுடன், திருப்பதியில் இருந்து, ராணுவ ஹெலிகாப்டரில், மீண்டும் மாலை 5:35 மணிக்கு சென்னை வருகிறார். இதனையடுத்து அவரை வரவேற்று வழியனுப்பி வைக்க, பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, மாலை … Read more