தமிழகத்தில் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் ஒத்திவைப்பு – அமைச்சர் காமராஜ்

கொரோனா தடுப்பு நடவடிக்கையால் ஏப்ரல் 1ம் தேதி முதல் தமிழகத்தில் அமல்படுத்தப்படவிருந்த ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் ஒத்திவைக்கப்படுகிறது. தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ளதால் தற்போதைக்கு திட்டம் சத்தியமில்லை என திருவாரூரில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்துக்கு பின் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் அறிவித்துள்ளார்.  இதனிடையே ஏற்கனவே ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் முதற்கட்டமாக நெல்லை, தூத்துக்குடி போன்ற மாவட்டங்களில் சோதனை முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த நிலையில், வரும் 1 ம் தேதி … Read more

நீட் தேர்வு ஒத்திவைப்பு – மத்திய மனிதவளத்துறை அமைச்சகம் அறிவிப்பு.!

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு (144 தடை) உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அனைத்து மாநில எல்லைகளும் மூடப்பட்டு, அத்தியாவசிய வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றன. மேலும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கில் பள்ளி, கல்லூரி மற்றும் அரசு தனியார் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளது. இதையடுத்து அனைத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  இந்த நிலையில் மே 3 ஆம் தேதி நடைபெறவிருந்த நீட் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. … Read more

பிளஸ் 1 தேர்வு ஒத்திவைப்பு.!

வரும் 26ம் தேதி நடைபெற இருந்த பிளஸ் 1 தேர்வு ஒத்திவைப்பதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. நாளை நடைபெற இருந்த பிளஸ் 2 தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் என்று தெரிவித்துள்ளது. மேலும் அனைத்து கல்லூரி மற்றும் வேலைவாய்ப்புத் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரசால் இதுவாரை 9 பாதிக்கப்பட்ட நிலையில், தமிழக அரசு வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. மேலும் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வணிக வளாகம், திரையரங்குங்கள் என ஏற்கனவே … Read more

BREAKING: கொரோனாவால் சட்டப்பேரவை முன்கூட்டியே ஒத்திவைப்பு.!

கொரோனா வைரஸ் காரணமாக தமிழக சட்டப்பேரவை வருகின்ற 31-ம் தேதியுடன் முடிவடைகிறது என சபாநாயகர் அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை  வருகின்ற ஏப்ரல் 09-ம் தேதி வரை நடைபெற இருந்த நிலையில் தற்போது 31-ம் தேதியுடன் முடிவடைகிறது .31-ம் தேதி அன்று காலை ,மாலை சட்டசபை நடைபெறும் என சென்னையில் சபாநாயகர் தலைமையில் நடைபெற்ற  அலுவல் ஆய்வு கூட்டத்தில் குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

BREAKING: ஜிஎஸ்எல்வி ராக்கெட் விண்ணில் ஏவப்படுவது ஒத்திவைப்பு..!

ஜி.எஸ்.எல்.வி.எப் -10  ராக்கெட் ஜிஐ சாட்-1 என்ற  செயற்கைக்கோளை ஏந்தி நாளை மாலை 05.43 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட்ட இருந்த நிலையில் தொழில்நுட்ப காரணங்களால் ஜி.எஸ்.எல்.வி.எப் -10  ராக்கெட்  பூமி கண்காணிப்பு செயற்கைக்கோளுடன்  விண்ணில்  ஏவுவது ஒத்திவைக்கப்பட்டுள்ளது என இஸ்ரோ தெரிவித்துள்ளது. இதற்கு முன் கடந்த ஆண்டு இஸ்ரோ விண்ணில் ஏவப்பட்ட சந்திராயன்-2 செயற்கைக்கோள் ஏவுவதற்கு முன் தொழில்நுட்ப காரணங்களால் நிறுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மக்களவையில் தொடர் அமளியால் 2 மணி வரை ஒத்தி வைப்பு..!

நேற்று பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு தொடங்கியது.இந்த கூட்டத்தொடர் வருகின்ற ஏப்ரல் 3-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் டெல்லியில் ஏற்பட்ட வன்முறை தொடர்பாக விவாதம் நடத்த கோரி மக்களவையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வலியுறுத்தினர். மக்களவை காலை துவங்கியதும் கேள்வி நேரம் துவங்குவதாக சபாநாயகர் ஓம்பிர்லா அறிவித்தார். இதனை தொடர்ந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேள்வி நேரத்தை ஒத்தி வைக்க கோரி முழக்கங்களை எழுப்பினர்.இதனால் அவையில் கூச்சல், குழப்பம் நிலவியது. பின்னர் மக்களவை  நண்பகல் … Read more