நெல்லை மாவட்டத்தில் அரையாண்டு தேர்வு தேதிகள் அறிவிப்பு..!

தமிழகத்தில் ஆறாம் வகுப்பு முதல் 12 வகுப்பு வரை மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு கடந்த டிசம்பர் 7ஆம் தேதி தொடங்கி 22ம் தேதி வரை நடைபெறும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி தேர்வுகள் கடந்த 7-ம் தேதி தொடங்கி நடைபெற்றது. இதற்கிடையில் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்களில் கடந்த 17ஆம் தேதி தொடங்கி பெய்த  கனமழை காரணமாக தேர்வுகளுக்கு ஒத்திவைக்கப்பட்டது. மேலும், பள்ளி, கல்லூரிகளுக்கும் தொடர்ந்து விடுமுறை அளிக்கப்பட்டது. … Read more

#Breaking:தூத்துக்குடி,நெல்லை மாவட்டங்களில் இன்று மதியம் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

கனமழை காரணமாக தூத்துக்குடி,நெல்லை ஆகிய மாவட்டங்களில் தற்போது பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, புதுக்கோட்டை, நாகை மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.அதன்படி,தற்போது தூத்துக்குடி,நெல்லை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில்,தூத்துக்குடி,நெல்லை ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று மதியம் மட்டும் விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.