நாட்டில் 50% -க்கும் அதிகமானோர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர் – மத்திய அமைச்சர் மாண்டவியா!

நாட்டில் 50% -க்கும் அதிகமானோர் தடுப்பூசி செலுத்தியுள்ளது பெருமைக்குரியது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா வைரஸின் தீவிரத்தை குறைக்கும் விதமாக தடுப்பூசி செலுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தென் ஆப்பிரிக்க நாடுகளில் ஓமைக்ரான் கொரோனா வைரஸ் பரவி வருவதால் இந்தியாவில் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், நாட்டில் தற்போது 50 சதவீதத்துக்கும் அதிகமானோர் தடுப்பூசி செலுத்தியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் … Read more

பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் தடுப்பூசி மையம் – மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா!

பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் தடுப்பூசி மையம் அமைக்க வேண்டும் என மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அவர்கள் காணொலி வாயிலாக மாநில சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த கூட்டத்தில் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட அனைத்து மாநில சுகாதாரத் துறை அமைச்சர்களும் கலந்து கொண்டுள்ளனர். இந்த கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா அவர்கள் நாடு முழுவதும் 18 வயதை … Read more

தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வலியுறுத்தினேன் – அமைச்சர் மா. சுப்பிரமணியன்!

தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க மத்திய குடும்ப நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவிடம் வலியுறுத்தியதாக  அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.  நேற்று மாலை டெல்லியில் உள்ள விக்யான் பவனில் மத்திய குடும்ப நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அவர்கள் தலைமையில் அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களில் சுகாதார துறை அமைச்சர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் கலந்து கொண்டார். இந்த … Read more

இந்தியாவில் இதுவரை 90 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது – மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்!

இந்தியாவில் இதுவரை 90 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அவர்கள் தெரிவித்துள்ளார். கொரோனா இரண்டாம் அலை தற்பொழுது நாட்டில் குறைந்து வரும் நிலையில், மூன்றாம் அலை வருவதை தவிர்க்கும் விதமாகவும், கொரோனாவின் தீவிரத்தை கட்டுப்படுத்தும் விதமாகவும் நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இதுவரை நாடு முழுவதும் 90 கோடி பேர் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டு உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் … Read more

அடுத்த மாதம் முதல் மீண்டும் தடுப்பூசி ஏற்றுமதி தொடங்கும் – மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்!

இந்தியாவில் அடுத்த மாதம் முதல் மீண்டும் தடுப்பூசி ஏற்றுமதி தொடங்கும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மான்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். அடுத்த மாதம் முதல் இந்தியா தன்னிடம் உள்ள உபரி தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்ய தொடங்கும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மான்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் அக்டோபர் மாதத்தில் இந்தியாவில் 30 கோடிக்கும் மேற்பட்ட டோஸ்கள்  கிடைக்கும் எனவும், அடுத்த மூன்று மாதங்களில் 100 கோடிக்கு மேற்பட்ட டோஸ் தடுப்பூசிகள் கிடைக்கும் … Read more