#BREAKING : மேலும் ஒருவர் போலீஸ் காவலில் மரணம் – வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

காவல்துறையினர் காவலில் வைத்து விசாரித்த போது மகேந்திரன் என்பவர் உயிரிழந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. சாத்தான்குளம் காவல்நிலையத்தில் காவல் துறையினர் தாக்குதலில் மகேந்திரன் என்பவர் உயிரிழந்தார் என புகார் கொடுக்கப்பட்டது. இது குறித்து விசாரணை நடத்தக் கோரி மகேந்திரனின் தாயார் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கை விசாரித்தது  நீதிமன்றம்.அப்பொழுது ,மகேந்திரன் என்பவர் உயிரிழந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றவுள்ளதாக தமிழக அரசு தெரிவித்தது. மேலும்  இந்த வழக்கு தொடர்பான விவரங்களை போலீசார் தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது. … Read more

தந்தை-மகன் உயிரிழப்பு.. “இனி ஒரு நொடியும் வீணாகக் கூடாது”- நீதிபதிகள்!

கோவில்பட்டி கிளைசிறையில் தந்தை-மகன் உயிரிழந்த சம்பவம் குறித்த வழக்கில் “இனி ஒரு நொடியும் வீணாகக் கூடாது” என மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் தெரிவித்தனர். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரின் மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கோவில்பட்டி கிளைச் சிறையில் உயிரிழந்தனர். சிறையில் தந்தை மகன் உயிரிழந்த விவகாரம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் முதல்வர் பழனிசாமி, தந்தை-மகன் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையானது, நீதிமன்றத்தின் அனுமதி பெற்ற பிறகு சிபிஐ … Read more

சிபிஐ விசாரணைக்கு முன் தடையங்களை அளிக்க வாய்ப்பு ! உயர்நீதிமன்ற மதுரை கிளை

நெல்லை டிஐஜி அல்லது சிபிசிஐடி விசாரிக்க இயலுமா?  என்று  பதில் அளிக்க  உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் சேர்ந்த பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜ் ஆகியோர் கோவில்பட்டி கிளைச் சிறையில் உயிரிழந்தனர். சிறையில் தந்தை மகன் உயிரிழந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்த விவகாரத்தில் முதலமைச்சர் பழனிசாமி   தந்தை-மகன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக வழக்கு விசாரணையானது நீதிமன்றத்தின் அனுமதி பெற்ற பிறகு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்படும் என்று தெரிவித்தார்.அதன்படி நீதிமன்றத்தில் … Read more

#BREAKING : போலீசார் மீது வழக்கு பதிவு செய்ய முகாந்திரம் உள்ளது – உயர்நீதிமன்ற மதுரை கிளை

போலீசார் மீது வழக்கு பதிவு செய்ய முகாந்திரம் உள்ளது என்று  உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சார்ந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் கோவில்பட்டி கிளைச் சிறையில் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இது தொடர்பான வழக்கினை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை  தாமாக முன் வந்து விசாரித்து வருகிறது. இந்த சம்பவம் தொடர்பான வழக்கை கோவில்பட்டி மாவட்ட  நீதிபதி ஹேமா மற்றும் மாஜிஸ்திரேட் பாரதிதாசன் விசாரித்து  வருகின்றனர். இந்த … Read more

சிறையில் தந்தை – மகன் உயிரிழந்த விவகாரம் ! தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி அறிக்கை தாக்கல்

தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி.  மதுரை உயர்நீதிமன்ற கிளையில் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் சேர்ந்த பென்னிஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜ் ஆகியோர் கோவில்பட்டி கிளைச் சிறையில் உயிரிழந்தனர். சிறையில் தந்தை மகன் உயிரிழந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  இந்த விவகாரம் தொடர்பாக மதுரை உயர்நீதிமன்ற கிளை தானாக முன்வந்து விசாரணை நடத்தியது. அதில் தமிழக போலீஸ் டிஜிபி மற்றும் தூத்துக்குடி எஸ்பி காணொளி காட்சி மூலம் ஆஜராக உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு … Read more