#BREAKING : மேலும் ஒருவர் போலீஸ் காவலில் மரணம் – வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

காவல்துறையினர் காவலில் வைத்து விசாரித்த போது மகேந்திரன் என்பவர் உயிரிழந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.

சாத்தான்குளம் காவல்நிலையத்தில் காவல் துறையினர் தாக்குதலில் மகேந்திரன் என்பவர் உயிரிழந்தார் என புகார் கொடுக்கப்பட்டது. இது குறித்து விசாரணை நடத்தக் கோரி மகேந்திரனின் தாயார் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கை விசாரித்தது  நீதிமன்றம்.அப்பொழுது ,மகேந்திரன் என்பவர் உயிரிழந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றவுள்ளதாக தமிழக அரசு தெரிவித்தது. மேலும்  இந்த வழக்கு தொடர்பான விவரங்களை போலீசார் தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது.